விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் |
இன்றைய தேதியில் சின்னத்திரையுலகின் செல்லக் குழந்தை ஷிவாங்கி தான். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட வந்தவர். இப்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் துருதுருவென வலம் வந்து எல்லோரையும் கவர்ந்திருக்கிறார். அவரது குழந்தை முகமும், சின்ன சின்ன சேட்டைகளும் டி.வி.ரசிகர்களை கட்டிப்போட்டிருக்கிறது.
இந்த நிலையில் ஷிவாங்கி சிறுவயதில் தனக்கு நேர்ந்த அவமானங்கள் குறித்து கண்ணீர் மல்க கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற நிகழ்ச்சியில் ஷிவாங்கி கலந்து கொண்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோ வெளியாகி உள்ளது.
அதில் ஷிவாங்கி சிறு வயதில் தன் குரலை எல்லோரும் கேலி செய்தார்கள் என்றும் தன்னை ஒரு மாதிரியான பெண் என்று விமர்சனம் செய்தார்கள் என்றும், அவமானத்தால் துடித்தேன் என்றும் கண்ணீர் மல்க கூறியிருக்கிறார். அதேசமயம் இப்போது தன்னை தங்களது வீட்டில் உள்ள பிள்ளை போல் கொண்டாடுகிறார்கள் என தெரிவித்துள்ளார். அதோடு தற்போது சிவகார்த்திகேயனுடன் நடித்து வரும் ஷிவாங்கி, அடுத்து விஜய், அஜித்துடன் நடிக்க விரும்புவதாகவும் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.