ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
வெள்ளித்திரையில் தனது புன்னகையால் ரசிகர்களை வசீகரித்த நடிகை மந்த்ரா, சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியிருக்கிறார். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 25 வாரங்களை தாண்டி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சியை தற்போது நடிகை மந்த்ரா தொகுத்து வழங்குகிறார். 8 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு சின்னத்திரையில் அடியெடுத்து வைத்திருப்பது குறித்து மந்த்ரா அளித்துள்ள பேட்டியில், நிஜமாகவே நான் எதிர்பார்த்திராத அனுபவங்கள் இந்த நிகழ்ச்சியில் கிடைக்கிறது. இதில் கவிதை பற்றியும் பேசலாம். சமையல் பற்றியும் பேசலாம். எது பற்றியும் பேசலாம். இந்த வாரம் மதுரை பற்றி பேசினோம். மதுரை என்றாலே மல்லி, மீனாட்சியம்மன் கோவில், ஆயிரங்கால் மண்டபம் நினைவுக்கு வரும். ஆனால் போட்டியாளர்களிடம் பேசும்போது மதுரை பற்றி அதற்கு மேலும் எத்தனையோ சிறப்புக்களை தகவல்களாக கொட்டினார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் மீண்டும் ரசிகர்களுடனான என் பிணைப்பு இப்போது இன்னும் இறுகியிருக்கிறது. அந்தவிதத்திலும் இந்த நிகழ்ச்சி எனக்கு ஸ்பெஷல், என்று கூறியுள்ளார்.
மீண்டும் சினிமாவில் நடிப்பது குறித்த கேள்விக்கு பதில் அளித்திருக்கும் மந்த்ரா, தற்போது தெலுங்கில் மங்கா என்ற படத்தில் டைட்டில் ரோலில் நடித்து வருகிறேன். தமிழிலும் ஒரு படத்தில் நடிக்கிறேன். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வரும், என்று கூறியிருக்கிறார். ஆயிரத்தில் ஒருவன் நிகழ்ச்சி ஜி தமிழ் தொலைக்காட்சியில் வியாழன், வெள்ளிக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.