‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களாய் வலம் வந்து, பின்னர் வாய்ப்புகள் இல்லாததால் பலர் சின்னத்திரையில் கால்பதித்து முத்திரை பதித்து வருகின்றனர். அந்த வகையில் மலையாள சினிமாவில் அறிமுகமாகி, கிருஷ்ணன் கோவில் கிருஷ்ணா, சகோதரன் சகோதரி, உள்ளிட்ட படங்களில் நாயகியாக நடித்தவர் ஸ்ரீஜா. தொடர்ந்து பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரை பக்கம் சென்றார். மதுரை சீரியல் மூலம் அறிமுகமான அவர் தற்போது சின்னத்திரையில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறி உள்ளார்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், மதுரை தான் என்னோட முதல் சீரியல். அதிலேயே எனக்கு தமிழக மக்களிடம் நல்ல அறிமுகம் கிடைச்சது. இப்போது முந்தானை முடிச்சு, சரவணன் மீனாட்சின்னு எனக்குஏற்ற கதை அமைஞ்சிருக்கு. என்னதான் கதாநாயகியாக நடித்தாலும் வில்லியாக நடிக்க எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் என் முகமும், தோற்றமும் பார்ப்பதற்கு ரொம்ப சாந்தமாக இருப்பதால் வில்லி கேரக்டர்கள் எனக்கு கிடைக்கவில்லை. அதேபோல் எனக்கும் கிளாமருக்கும் செட் ஆகாது. வருவாய் கிடைக்கிறது. புகழ் கிடைக்கிறதேன்னு மற்றவங்க முகம் சுளிக்கும் அளவுக்கு நடிக்க மாட்டேன். பிடிக்காத கேரக்டரில் எவ்வளவு கொடுத்தாலும் நடிக்க மாட்டேன், என்று கூறியுள்ளார்.