'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? | போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் 2 நிகழ்ச்ச்சி இறுதிக் கட்டத்தை நெருங்கிவிட்டது. வரும் செப்டம்பர் 30ம் தேதி இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. கடந்த வாரத்தில் 6 போட்டியாளர்களாக இருந்தவர்களில் பாலாஜி, யாஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட தற்போது ஜனனி, ரித்விகா, ஐஸ்வர்யா, விஜயலட்சுமி ஆகியோர் இறுதிப் போட்டிக்குத் தேர்வாகி உள்ளனர்.
இறுதிப் போட்டிக்கான டாஸ்க்குகள் இந்த வாரம் கடுமையாக இருக்கலாம். எந்த ஆண் போட்டியாளரும் இல்லாத இறுதிப் போட்டி எப்படியிருக்கும் என்பதிலும் ரசிகர்களிடம் ஆர்வம் அதிகரித்திருக்கிறது. மிகவும் நியாயமாக செயல்பட்ட யாஷிகா வெளியேறிய போது பேசிய பேச்சுகள் ரசிகர்களிடம் அவருக்கென ஒரு தனி இமேஜை உருவாக்கியுள்ளது. ஐஸ்வர்யா இறுதிப் போட்டியில் இடம் பெற்றுள்ளதை ஒவ்வொரு வாரமும் வாக்களிக்கும் ரசிகர்களே விரும்பவில்லை. அதில் ஏதோ ஒரு அரசியல் இருக்கிறது என்றே பலரும் கருதுகிறார்கள். அந்த அரசியலுக்கு கமல்ஹாசனும் உடந்தையாக இருக்கிறாரோ என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கிறது.
நிகழ்ச்சியின் 67வது நாளில் வந்து இணைந்த விஜயலட்சுமி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருப்பதும் நியாயமானதாக இல்லை என்றே பலரும் கருதுகிறார்கள். முதல் சீசனை விட இந்த இரண்டாம் சீசனில் பல்வேறு சர்ச்சைகள், சண்டைகள் எழுந்தாலும் இறுதிக் கட்ட பரபரப்பு அதிகமாகவே உள்ளது.
வரும் ஞாயிறு அன்று நான்கு மணி நேரங்களுக்கும் மேலாக இறுதிப் போட்டி நடக்க உள்ளது. ஜனனி, ரித்விகா ஆகியோரில் இருவர்தான் பிக் பாஸ் 2 சாம்பியன் பட்டத்தை வெல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதை மீறி வேறு ஏதாவது நடந்தால் ரசிகர்களின் சாபத்திற்கு இந்த நிகழ்ச்சி ஆளாகும் என்பதே உண்மை.