இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
நடிகை ஸ்ருதிஹாசன் அவரது இரண்டாவது காதலரான சாந்தனு ஹசரிகாவுடன் நான்கு வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு திடீரெனப் பிரிந்துவிட்டார். எப்போது திருமணம் செய்வது என்பது குறித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்துவிட்டார்கள் என்ற தகவல் வெளியானது.
மும்பையில் ஒரு அபார்ட்டிமென்ட்டில் வசித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவரது தங்கை அக்ஷரா ஹாசனும் மும்பையில்தான் இருக்கிறார். நேற்று தனது தங்கையுடன் இருக்கும் புகைப்படம் மற்றும் சில புகைப்படங்களைப் பகிர்ந்து, “நான் ஒளியை உணர்கிறேன். இந்தத் தருணங்களுக்காக நான் மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாக, நன்றியுள்ளவளாக உணர்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
காதலருடன் இத்தனை நாள் வாழ்ந்ததை இருட்டில் உள்ளதைப் போன்று குறிப்பிடவே, தற்போது 'நான் ஒளியை உணர்கிறேன்,' என்று குறிப்பிட்டுள்ளார் போலிருக்கிறது.