அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் | வாக்காளர் பட்டியலில் மமிதா பைஜூ பெயர் நீக்கம் | காதலரின் புகைப்படங்களை நீக்கிய ஸ்ருதிஹாசன் : முடிவுக்கு வந்ததா காதல்? | ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் தொடர் ராஜா ராணி. கடந்த ஒரு ஆண்டாக ஒளிபரப்பாகும் இந்த சீரியல் தான் இந்த ஆண்டு சிறந்த சீரியலுக்கான விஜய் அவார்டையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த பவித்ராவும், வினோதினி என்கிற முக்கியமான கேரக்டரில் நடித்து வந்த வைஷாலியும் விலகியிருக்கிறார்கள். ஒரே நேரத்தில் இரு நடிகைகள் விலகி இருப்பது ராஜா ராணி சீரியல் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
வைஷாலிக்கு உடல்நல பிரச்சினை இல்லை என்றும், அவர் 3 மாதம் கட்டாய ஓய்வெடுக்க வேண்டும் என்ற டாக்டர்கள் கூறியதால் அவர் விலகியதாக கூறப்படுகிறது. பவித்ரா இதே சேனலில் ஒளிபரப்பாகும் இன்னொரு சீரியலில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.
இருவர் விலகினாலும் அவர்கள் நடித்து வந்த கேடக்டர்கள் தொடர்கிறது. இவர்களுக்கு பதிலாக வேறு நடிகைகள் நடிப்பார்கள் என்கிறது சீரியல் தரப்பு. வைஷாலி, பவித்ரா இடத்தை புதியவர்கள் நிரப்புவார்களா? என்பது போகப் போகத்தான் தெரியும்.