‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விஜய் டிவிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். 5 சீசன்களை கடந்து தற்போது 6வது சீசன் நடந்து வருகிறது. இம்முறை இன்னும் பிரமாண்டமாக. வெற்றியாளர்களுக்கு லட்சங்கள் மதிப்புள்ள பரிசுகள் மட்டுமின்றி விலைமதிப்பில்லா ஒரு வாய்ப்பாக இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெறுபவருக்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையில் பாடும் ஒரு அரிய வாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.
இம்முறை போட்டியாளர்கள் இரு அணிகளாக போட்டியிட்டு வருகின்றனர், சமீபத்தில் போட்டியாளர் ராஜலக்ஷ்மி, நெசவு தொழில் பற்றி பாடிய நாட்டுப்புற பாடல் மிகவும் வரவேற்பை பெற்றுள்ளது. நடிகர் மாதவன், இதை பற்றி தனது டுவிட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
இந்த வார நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிம்பு பங்கேற்கிறார். இந்தவார நிகழ்ச்சியில் பல உணர்ச்சிமிகு தருணங்கள் நடந்துள்ளன. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல பாடகர்கள் பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம் மற்றும் சுவேதா மோகன் ஆகியோர் உள்ளனர்.