‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் "சொல்வதெல்லாம் உண்மை" என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். இது குடும்ப பிரச்னைகளுக்கு தீர்வு காணும் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் 1500-வது எபிசோட் படப்பிடிப்பிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் கோபமாக வெளியேறும் வீடியோ காட்சி ஒன்று நேற்று வெளியானது.
சேனல் அதிகாரி ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணனிடம் "உங்கள் மீது ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு. இந்த நிகழ்ச்சியை நீங்கள் நடத்தவில்லை" என்கிறார். அதை கேட்கும் லட்சுமி ராமகிருஷ்ணன் மைக்கை பிடுங்கி எரிந்துவிட்டு அந்த அரங்கை விட்டு வெளியேறுகிறார்.
சொல்வதெல்லாம் நிகழ்ச்சியிலிருந்து லட்சுமி ராமகிருஷ்ணன் வெளியேறி விட்டதாக தகவல் பரவியது. ஆனால் இது நிகழ்ச்சியின் விளம்பரத்துக்காக சேனலே ஏற்பாடு செய்த செட்-அப் தான் என்று சேனல் தரப்பிலிருந்து சொல்கிறார்கள். இப்போதெல்லாம் ஏதாவது பரபரப்பு கிளப்பித்தான் விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டியது இருக்கிறது என்கிறார்கள் டி.வி ரசிகர்கள்.