கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை | 20 வருடமாக நானும் ஹனிரோஸும் இப்போதும் பேச்சுலர்ஸ் தான் : உருகும் மலையாள நடிகர் | இதயக்கனி, திருப்பாச்சி, இந்தியன் 2 - ஞாயிறு திரைப்படங்கள் |
குஷ்பு தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் தொடர் நந்தினி. இந்த தொடரில் மலையாள நடிகை மாளவிகா வேல்ஸ் நாயகியாக நடித்து வருகிறார். தமிழ், கன்னடத்தில் நேரடியாக தயாராகும் இந்த சீரியல் தெலுங்கு, மலையாளத்தில் டப் செயப்பட்டு வருகிறது. மேலும், இந்த நந்தினி சீரியல் தவிர அம்முவின்டே அம்மா என்ற மலையாள சீரியலிலும் தற்போது லீடு ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார் மாளவிகா வேல்ஸ்.
மேலும், மலையாளத்தில் தான் நடித்துள்ள சீரியல்களில் இதுவரை தனக்குத்தானே டப்பிங் பேசியுள்ளாராம் மாளவிகா. ஆனால் இந்த நந்தினி சீரியல் மலையாளத்தில் டப் செய்யப்பட்டு வெளியாகும் நிலையில், அவருக்கு இன்னொருவர்தான் டப்பிங் பேசுகிறாராம். மாதத்தில் 20 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடை பெறுவதால் அவருக்கு டப்பிங் பேச போதிய நேரம் கிடைப்பதில்லையாம்.
அது மட்டுமின்றி நந்தினி சீரியலில் நடிப்பதால் அவர் மலையாளத்தில் தற்போது நடித்து வரும் அம்முவின்டே அம்மா சீரியலுக்கும் டப்பிங் பேச அவருக்கு போதிய நேரம் கிடைக்கவில்லையாம். இதனால் தாய்மொழியான மலையாளத்தில் வெளியாகும் நேரடி தொடரிலும் தனக்கு வேறு நபர் டப்பிங் கொடுத்திருப்பதால் மனதளவில் வருத்தத்தில் உள்ளாராம் மாளவிகா வேல்ஸ்.