குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
சின்னத்திரையில் நிகழ்ச்சி தொகுப்பாளராகி பின்னர் சினிமாவுக்கு வந்தவர் இமான் அண்ணாச்சி. தற்போது காமெடியன், குணசித்ர நடிகன் என பல தரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வருகிறார். ஒரு படத்தில் கதையின் நாயகனாக நடிக்கவும் தயாராகிக்கொண்டிருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் கைவசம் பத்து படங்களுக்கு மேல் இருப்பதாக சொல்கிறார். இருப்பினும், சின் னத்திரையில் குட்டி சுட்டீஸ், சொல்லுங்கண்ணே சொல்லுங்க போன்ற நிகழ்ச்சிகளை எப்போதும் போலவே கடந்த நான்கு ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நான் இப்போது சினிமாவில் பிசியாக இருக்கிறேன். என்றாலும், சின்னத்திரைக்கும் நேரம் ஒதுக்கி அந்த நிகழ்ச்சிகளில் ஆரம்பத்தில் இருந்த அதே ஆர்வத்துடன் கலந்து கொண்டு வருகிறேன். காரணம், எனக்கு முதல் அடையாளமே சின்னத்திரைதான். அதில் பிரபலமாகிதான் சினிமாவுக்கு வந்தேன். அதோடு, குட்டீஸ் நிகழ்ச்சியில் குழந்தைகளுடன் உரையாடுவது மிகப்பெரிய சந்தோசத்தைக் கொடுக்கிறது. அவர்களின் கள்ளம் கபடமற்ற பேச்சைக் கேட்பது ஆனந்தமாக உள்ளது. அவர்களுடன் நானும் மழலையாகி விடுகிறேன்.
அதேபோல் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்ற நிகழ்ச்சியில் நிறைய மக்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது. சினிமா நடிகனாக மட்டுமே இருந்தால் பொதுமக்களை சந்திக்க முடியாது. ஆனால் இந்த நிகழ்ச்சி மூலம் பலதரப்பட்ட மக்களை சந்திக்கிறேன். அதுவும் நல்லதொரு அனுபவமாக உள்ளது. அதனால் நான் என்னதான் சினிமாவில் பிசியானாலும், சின்னத்திரையில் வழங்கும் நிகழ்ச்சிகளை விடவே மாட்டேன். தொடர்ந்து சினிமா, சின் னத்திரை என்று பயணித்துக்கொண்டேயிருப்பேன் என்கிறார் இமான் அண்ணாச்சி.