குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் | இன்னும் 6 நாட்களில் ஓடிடிக்கு வரும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | பிளாஷ்பேக்: 14 வயதில் பாட்டு... 21 வயதில் தேசிய விருது... 37 வயதில் மரணம் |
நாதஸ்வரம் தொடரில் அறிமுகமானவர் கீதாஞ்சலி. அந்த தொடருக்கு இயக்குனர் திருமுருகன் நடத்திய ஆடிசனில் தேர்வு பெற்றார். நாதஸ்வரம் காரைக்குடியில் நடக்கும் கதை என்பதால் அக்மார்க்க காரைக்குடி பெண்ணான கீதாஞ்சலி தேர்வானார்.
அதில் சிறப்பான நடிப்பின் மூலம் பாராட்டுகளை அள்ளினார். நாதஸ்வரம் படப்பிடிப்பு முழுவதும் காரைக்குடியில் நடந்ததால் அவருக்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனால் அவர் தற்போது நடித்து வரும் வாணி ராணி தொடர் படப்பிடிப்பு முழுவதும் சென்னையிலேயே நடந்து வருகிறது. தனது தோழியின் வீட்டில் தங்கியிருந்து நடித்து வருகிறார்.
மேலும் சில தொடர் வாய்ப்புகள், சினிமா வாய்ப்புகளும் வருவதால் தனது வீட்டையும், குடும்பத்தினரையும் சென்னைக்கு குடிமாற்றுகிறார் கீதாஞ்சலி. இதற்காக அவர் தீவிரமாக வீடு தேடிக் கொண்டிருக்கிறார். அதோடு தன் தங்கையையும் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.