ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
புதிய தலைமுறை சேனலில் 4 ஆண்டுகளாக நட்சத்திர செய்தி வாசிப்பாளராக பணியாற்றியவர் சரண்யா. ‛சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது , ‛ஆயிரம் முத்தங்களுடன் தேன்மொழி' போன்ற படங்களிலும் நடித்தார். திடீரென லண்டன் சென்றார். அங்கு சில மாதங்கள் இருந்துவிட்டு இப்போது மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பியிருக்கிறார். தற்போது நியூஸ் 18 சேனலில் செய்தியாளராக பணிக்கு சேர்ந்திருக்கிறார்.
தற்போது செய்தியாளராக பணியாற்றினாலும் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே சரண்யாவின் விருப்பமாம், இதனால் நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். "சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது சர்வதேச படவிழாக்களில் நிறைய விருது வாங்கியது. எனக்கும் நல்ல பெயரை பெற்றுத்தந்தது. நட்புக்காக அந்தப் படத்தில் நடித்தேன். மீண்டும் நடிக்கும் எண்ணம் இல்லாமல் இருந்தது. தற்போது தோழிகள் உனக்கு நடிப்பு நன்றாக வருகிறது என்று வற்புறுத்துவதால் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். எனது செய்தியாளர் பணிக்கு பங்கம் வராமல் நல்ல கேரக்டர்கள் வரும்போது நடிப்பேன். மரத்தை சுற்றி டூயட் பாடுகிற சாதாரண ஹீரோயின்கள் கேரக்டரில் நடிக்க விருப்பம் இல்லை. நல்ல அழுத்தமான கேரக்டர்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்" என்கிறார் சரண்யா.