ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
வியட்நாம் வீடு சுந்தரம் நாடக உலகில் இருந்து சினிமாவுக்கு வந்தார். அங்கிருந்து அவர் சின்னத்திரைக்கு வந்தார். நாடகம், சினிமாவை விட அவர் சின்னத்திரையில்தான் நீண்ட காலம் இருந்தார். புகழ் அடைந்தார். சின்னத்திரைக்காக நிறைய உழைத்தார். 14 ஆண்டுகள் அவர் சின்னத்திரையில் நடிகராகவும், டப்பிங் கலைஞராகவும் வாழ்ந்தார் என்பதோடு. சின்னத்திரை கலைஞர்கள் அனைவருக்கும் மூத்த வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.
மை டியர் பூதம் என்ற தொடரில் அறிமுகமானார். அது அவருக்கு குழந்தைகளை ரசிகர்களாக கொடுத்தது. அதன் பிறகு மெட்டிஒலி அவருக்கு பொதுமக்களிடம் ஒரு பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது. நாடகம், சினிமா தராத புகழை மெட்டிஒலி கொடுத்தது. அதன் பிறகு ராஜராஜேஸ்வரி, பொண்டாட்டி தேவை, பைரவி, அத்திப்பூக்கள், பிள்ளை நிலா, வள்ளி என 18 சீரியல்களில் நடித்தார்.
காலை 8 மணிக்கு படப்பிடிப்பு என்றால் 7 மணிக்கே வந்து விடுவார். என்ன கேரக்டரோ அதை அவர் சிறப்பாக நடிப்பதோடு மற்றவர்களையும் ஊக்கப்படுத்துவார். நன்றாக நடித்தால் மனம் திறந்து பாராட்டுவார். 50 படங்களுக்கு மேல் திரைக்கதை வசனம் எழுதியவர், 5 படங்களை இயக்கியவர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல் குழந்தையைப்போல பழகுவார். இயக்குனர்கள் பேரன் வயதில் இருந்தாலும் இயக்குனர்களுக்கான மரியதையை தருவார். சம்பள விஷயத்தில் கறார் காட்ட மாட்டார். கொடுப்பதை வாங்கிக் கொள்வார். இப்படி எளிமையின் சின்னமாக விளங்கியவர்.
பல சின்னத்திரை கலைஞர்களின் சொந்த பிரச்சினைகளை தீர்த்து வைத்திருக்கிறார். கணவன் மனைவி பிரிவை தடுத்து நிறுத்தியிருக்கிறார். வயதில் மூத்தவர் என்பதால் அவர் பேச்சை எல்லோரும் கேட்பார்கள். அவர் கடைசியாக வந்தாமல என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது "இந்தப் படம் என் கடைசி படமாக இருக்கும். வாழ்க்கையில் வில்லனாக இருந்ததில்லை. அதனால் வில்லனாக நடித்து அதையும் நிறைவு செய்கிறேன். என் வாழ்க்கை நிறைவானது. மற்றவர்களுக்கு கெடுதல் நினைக்காகாமலும், கெடுதல் செய்யாமலும் வாழ்கிற வாழ்க்கைதான் அற்புதமானது" என்றார். அவர் சொன்னபடியே அதுவே அவரது கடைசி படமாகவும் அமைந்து விட்டது. வியட்நாம் வீடு சுந்தரத்தின் இழப்பு சின்னத்திரைக்கு பெரிய இழப்பாகும்.