‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாட்சா, அண்ணாமலை படங்களை இயக்கியவர் சுரேஷ் கிருஷ்ணா, கடைசியாக பரத் நடிப்பில் ஆறுமுகம் படத்தை இயக்கினார். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்த சுரேஷ் கிருஷ்ணா மகாபாரதம் தொடரை இயக்கினார். அதன் பிறகு சில மினி தொடர்களை இயக்கினார்.
தற்போது டி.வி.சேனல்களுக்கென்றே தனி திரைப்படங்களை இயக்குகிறார். ஹிட்லர் எங்கிருந்தோ வந்தான் என்பது படத்தின் தலைப்பு, ஜீ தமிழ் சேனலுக்காக இயக்கிய இந்தப் படத்தில் தேவயானி, டெல்லி கணேஷ், அர்ஜூன், விக்னேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். 2 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடிய திரைப்படத்தை 9 நாளில் எடுத்து முடித்துள்ளார்.
இதுகுறித்து சுரேஷ் கிருஷ்ணா கூறும்போது: திறமையான பல திரைக் கலைஞர்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், புதிய இளைஞர்கள் திறமையோடும், புதிய சிந்தனையோடும் வருகிறார்கள். அவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை. அப்படிப்பட்டவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இத்தகைய திரைப்படங்கள் உதவும். சரியாக திட்டமிட்டால் 30 லட்சம் ரூபாய் ஒரு திரைப்படத்தை எடுத்து விட முடியும். என்கிறார் சுரேஷ் கிருஷ்ணா.