போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தேவயானி நடித்த கோலங்கள் தொடரில் ஒரு முக்கியமான நெகடீவ் ரோலில் நடித்தவர் சந்திரா லட்சுமண். அதையடுத்து பல தொடர்களில் நடித்த அவர் தற்போது பாசமலர் தொடரில் நடித்து வருகிறார். மேலும், அவரது பேச்சில் மலையாள வாடை அடிப்பதால் சின்னத்திரை வட்டாரங்களில் அவரை மலையாள நடிகை என்றே நினைத்துக்கொள்கிறார்கள்.
இதுபற்றி சந்திரா கூறும்போது, நான் மலையாள சினிமாவில் 6 படங்களில் நடித்து விட்டுத்தான் தமிழுக்கு வந்தேன். ஸ்ரீகாந்த்-திரிஷா நடித்த மனசெல்லாம் என்ற படத்தில் தங்கை வேடத்தில் நடித்தேன். அதன்பிறகு திருச்செல்வம் இயக்கிய கோலங்கள் தொடரில் நடித்தேன். பின்னர் தமிழ், தெலுங்கு என பல சீரியல்களில் பிசியாகி விட்டேன். மேலும், என்னுடன் நடிப்பவர்கள் அனைவருமே எனது தமிழில் மலையாளம் வாடை இருப்பதால் என்னை மலையாளி என்றே நினைத்துக்கொள்கிறார்கள். சிலர் என்னிடம்கூட நீங்கள் மலையாளியா என்கிறார்கள்.
ஆனால், நிஜத்தில் நான் மலையாளி அல்ல. பாலக்காட்டு அய்யர் பெண் நான். எங்கள் வீட்டில்கூட அனைவருமே தமிழில்தான் பேசுவோம். சீரியல்களில் தமிழில் இருக்கும் டயலாக் பேப்பரைகூட படித்துதான் நடிக்கிறேன் என்று கூறும் சந்திரா லட்சுமண், நான் பிறந்து வளர்ந்தது என்னவோ பாலக்காடாக இருந்தாலும், பல ஆண்டுகளாக சென்னைவாசியாகி விட்டேன். ஆக, இப்போது நான் சென்னை தமிழச்சி என்கிறார்.