போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடரில் முதல் பாகத்தில் மிர்ச்சி செந்தில்-ஸ்ரீஜா நடித்தனர். அவர்களுடன் அப்பா-அம்மாவாக டைரக்டர் ராஜசேகர்-குயிலியும் நடித்தனர். அப்போது காதலர்களாக நடித்த செந்தில்-ஸ்ரீஜா இருவருக்குமிடையே நிஜத்திலும் காதல் ஏற்பட்டு, பின்னர் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். அதையடுத்து மிர்ச்சி செந்தில் சினிமாவில் நடிப்பை தொடர்ந்து வரும் நிலையில் ஸ்ரீஜா இல்லத்தரசியாகி விட்டார்.அதையடுத்து, சரவணன் மீனாட்சி தொடரின் சீசன்-2வில் பின்னர் கவின்-ரஷிதா இருவரும் நடித்து வருகின்றனர். முன்பு அப்பா-அம்மாவாக நடித்த டைரக்டர் ராஜசேகர்-குயிலி இருவரும் சீசன்-2வில் தாத்தா பாட்டியாகி விட்டனர்.
மேலும், சீசன் -2வில் நாயகியாக நடித்து வரும் ரஷிதா, தனது துடுக்குத்தனமான நடிப்பினால் சின்னத்திரை நேயர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதேபோல் சினிமாத்துறையினரையும் அவரது நடிப்பு கவர்ந்ததால், உப்புக்கருவாடு படத்தில் கருணாகரனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் ரஷிதா. அதோடு, சின்னத்திரையை விடவும் பெரிய திரையில் இன்னும் பலபடி உயர்ந்து சிறப்பான பர்பாமென்ஸ் கொடுத்துள்ள ரஷிதா, தொடர்ந்து குடும்பப் பாங்கான வேடங்கள் கிடைத்தால் சின்னத்திரையை போலவே சினிமாவையும் தொடரப்போகிறாராம்.