‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கலக்க போவது யாரு நிகழ்ச்சிக்கு பல ஆண்டுகளுக்கு முன்பு பங்கேற்பாளராக வந்த ஈரோடு மகேஷ் இப்போது அந்த நிகழ்ச்சியின் நடுவர் என்ற நிலைக்கு வளர்ந்திருக்கிறார். இதுதவிர நடுவுல கொஞ்சம் டிஸ்ட்ர்ப் பண்ணுவோம் என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறார். சந்தானம், சிவகார்த்திகேயன் வரிசையில் மகேசுக்கும் சினிமா ஆசை வந்தது. பல படங்களில் காமெடியானக நடித்தார். குறிப்பாக சட்டம் ஒரு இருட்டரை 2, சும்மா நச்சுன்னு இருக்கு படங்களில் முழுநீள காமெடியனாக நடித்தார் என்றாலும் சிகரம் தொடு படத்தில் விக்ரம்பிரபு நண்பனாக நடித்தது அவருக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தற்போது ஜம்புலிங்கம் என்ற 3டி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழியில் தயாராகும் இந்தப் படம் தனக்கு நல்ல திருப்பம் தரும் என்று நம்புகிறார் மகேஷ். எல்லோரையும் போன்று அடுத்து ஹீரோவாகும் முயற்சியில் இருக்கிறார். நான்கைந்து கதைகள் கேட்டிருக்கிறார். விரைவில் ஈரோடு மகேஷ் ஹீரோவானார் என்கிற செய்தி வரும்.