போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
பொதிகை தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிழல் தொடர் மற்ற தனியார் தொலைக்காட்சி தொடர்களுக்கு நிகரான வரவேற்புடன் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. கே.ஏ.ராஜபாண்டியன் எழுதிய கதையை சையத் ரஃபிக் பாஷா இயக்குகிறார்.
முதியவர்கள், குழந்தைகள் அடைக்கலமாகி இருக்கும் அன்பு இல்லம் தான் கதை களம். இங்கு நடக்கும் சுவாரஸ்யமான, நெகிழ்ச்சியான, திடுக்கிடும் சம்பவங்களை கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. காதல் கணவனால் ஏமாற்றப்பட்ட கலா தன் குழந்தையுடன் அன்பு இல்லத்தில் போராட்டம் நிறைந்த வாழ்க்கையை வாழ்வது ஒரு கதை. பார்வை இழந்த ஆனந்தன் அநாதையாக அன்பு இல்லத்தில் தஞ்சம் அடைகிறான். அங்கு அவனுக்கு ரஞ்சனி என்ற பெண்ணின் அன்பும், காதலும் கிடைக்கிறது. அந்த காதலுக்கு ஏற்படும் பிரச்சினைகள், அதை எதிர்த்து காதலர்கள் போராடுவது தனிக் கதை. இப்படி ஒரே இடத்தில் நடக்கும் இரண்டு கதைகளுடன் தொடர்கிறது நிழல்கள் தொடர். தற்போது இது 100 வது எபிசோடை கடந்திருக்கிறது. பொதிகை டி.வியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகிறது.