பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரை சேனல்களில் டப்பிங் சீரியல் ஒளிபரப்புவது அதிகரித்து உள்ளது. இதனால் நேரடி சீரியல் தயாரிப்பது குறைந்து விட்டது. சின்னத்திரை நடிகர், நடிகைகள் முதல் தொழில்நுட்ப கலைஞர்கள் வரை அனைவருக்கும் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால் சின்னத்திரையில் டப்பிங் சீரியல் ஒளிபரப்புவதற்கு சின்னத்திரை நடிகர் சங்கம், சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிகமான சீரியல்களை இயக்கிய முன்னனி சீரியல் இயக்குனர் பாலாஜி யாதவ் வேலை வாய்ப்பு இல்லாமல் கடனாளியாகி தற்கொலை செய்து கொண்டார். இது சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. கடந்த ஞாயிற்று கிழமை பிரசாத் லேப் தியேட்டரில் பாலாஜி யாதவிற்கு அஞ்சலி கூட்டம் நடந்தது. அப்போது பேசிய பலரும் டப்பிங் சீரியலுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
டப்பிங் சீரியல்களுக்கு தங்கள் எதிர்ப்பை காட்டும் வகையில் இன்று (ஏப்., 15ம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்தனர் சின்னத்திரை கலைஞர்கள். சென்னை, வடபழனியில் உள்ள தென்னிந்திய இசை கலைஞர்கள் சங்க வளாகத்தில் சின்னத்திரை கலைஞர்களின் கூட்டமைப்பு நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு...
* மொழி மாற்ற தொடர்களால் சின்னத்திரையில் பணிபுரியும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள்... என்று 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால், தமிழ் தொலைக்காட்சிகளில் ஔிபரப்பாகும் மொழி மாற்ற தொடர்களை உடனடியாக தவிர்க்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களை கேட்டு கொள்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
* மொழிமாற்ற தொடர்களுக்கு பதிலாக, நேரடி தொடர்களுக்கு வாய்ப்பு அளித்து பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வாழ்வு அளிப்பது.
* முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்துவது...
* இன்றே சின்னத்திரை கலைஞர்கள் எல்லோரும் ஊர்வலமாக, அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நேரடியாக சென்று டப்பிங் சீரியலை உடனடியாக நிறுத்த சொல்லி கோரிக்கை மனுவை வழங்குவது...
போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த போராட்டத்தில் ராதிகா, டி.ஜி.தியாகராஜன், நளினி, சுஜாதா விஜயகுமார், பெப்சி சிவா, பாலேஸ்வர், பசி சத்யா, சுஜிதா, சாதனா, நீலிமா உள்ளிட்ட பல சின்னத்திரை கலைஞர்கள் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்கேற்றனர். சின்னத்திரை கலைஞர்களின் போராட்டத்தால், இன்று ஒருநாள் சின்னத்திரை சம்பந்தப்பட்ட அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டன.