ஜல்லிக்கட்டு பின்னணியில் உருவாகும் 'நின்னு விளையாடு' | பின்னணி இசை இல்லாத படம் | பிளாஷ்பேக் : திரையில் காமெடி நடிகை, நிஜத்தில் ஹீரோயின் | சுந்தரா டிராவல்ஸ் ராதா மீது போலீசில் புகார் | சமையல் நிகழ்ச்சியில் வடிவேலு? | புது தொடரில் கமிட்டான சல்மா அருண் | பிரம்மாண்டமாக நடந்து முடிந்த ஜீ தமிழ் கோல்டன் அவார்ட்ஸ் விருது விழா - எப்போது ஒளிபரப்பு | ரீ-ரிலீஸில் சாதனை படைத்த 'கில்லி' | 'ராயன்' படத்திற்கு முன்பு 'குபேரா' டீசர்' | கோடை விடுமுறை வெளியீடுகள் ஆரம்பம் : மே 3ல் 5 படங்கள் ரிலீஸ் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் சரவணன் மீனாட்சி தொடர் மிகவும் பாப்புலரான தொடர். இந்த தொடரின் முதல் பகுதியில் சரவணாக நடித்த மிர்ச்சி செந்திலும், மீனாட்சியாக நடித்த ஸ்ரீஜாவும் நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விட்டதால் சீரியலிலிருந்து விலகினார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு சரவணன் மீனாட்சி இரண்டாம் பகுதி தொடங்கியது. இதில் சரவணனாக இர்பானும் மீனாட்சியாக மகாலட்சுமியும் நடித்தனர். இர்பானுக்கு சினிமாவில் நடிக்கும் ஆர்வம் இருந்ததால் அவரும் இடையில் விலகினார். அவருக்கு பதிலாக வெற்றி, சரவணன் கேரடக்டரில் நடிக்க ஆரம்பித்தார். இப்போது அவரும் வெளியேறிவிட்டார்.
சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் என்கிற முக்கியமான கேரக்டர் வரும். மீனாட்சி சரவணனை திருமணம் செய்வாளா? வேட்டையனை திருமணம் செய்வாளா என்கிற பரபரப்பில் தொடர் சென்றபோது மீனாட்சி யாரை திருமணம் செய்ய வேண்டும் என்கிற முடிவை பார்வையாளர்களிடம் விட்டார்கள். பெரும்பான்மையான நேயர்கள் வேட்டையனைத்தான் மணக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கவே அப்படியே கதையை மாற்றி விட்டதாகவும், இதனால் சரவணன் கேரக்டர் டம்மியாக்கப்பட்டதாகவும். அதன் காரணமாக வெற்றி வெளியேறியதாகவும் கூறப்படுகிறது.
இர்பானுக்கு பிறகு வெற்றி வந்தபோது இர்பானிடமிருந்த இளமையும், சுறுசுறுப்பும் வெற்றியிடம் இல்லை என்கிற கருத்து தயாரிப்பு தரப்புக்கு இருந்தாகவும் இதனால் திட்டமிட்டே வெற்றி வெளியேற்றப்பட்டார் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் இர்பான் போன்று வெற்றியும் சினிமா பக்கம் சென்றுவிட்டதால் தொடரிலிருந்து வௌியேறியதாக கூறப்படுகிறது. எது எப்படியோ சீரியல் கதை மாதிரி அதை சுற்றி நடக்கும் கதைகூட விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது.