‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சென்னையை சேர்ந்த ஜி.அலெக்ஸ், பென்சீகர், ஆரோக்கியதாஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தனர். அதில் "தனியார் தொலைக்காட்சிகளில் ஆபாசமான நடனங்களும், ஆபாசமான வசனங்களும், வன்முறை காட்சிகளும் அதிகமாக ஒளிபரப்பாகிறது. இதனால் தொலைக்காட்சி நிகழ்சிகளுக்கு தணிக்கை கொண்டு வர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தனர்.
இந்த வழக்கில் கோர்ட் அளித்த தீர்ப்பு வருமாறு: இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசு அளித்துள்ள பதில் மனுவில். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு தணிக்கை எதுவுமில்லை என்றாலும் கேபிள் டி.வி நெட்வொர்க் சட்டம் 1995ன்படி கண்காணிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகள் மீறியதாகவோ, அல்லது வேறு விதமான புகார்கள் வந்தால் அதன் மீது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை கண்காணிக்க எலெக்ட்ரானிக் மீடியா கண்காணிப்பு மையமும் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது. பொதுவான சட்டங்களை இயற்றுவது குறித்து அரசுதான் தீர்மானிக்க வேண்டும். அதில் நீதிமன்றம் தலையிடவோ சட்டம் இயற்ற வற்புறுத்தவோ, உத்தரவிடவோ முடியாது. அரசுதான் முடிவு செய்ய வேண்டும். என்று தீர்ப்பு கூறியது.