‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பொதுவாக டாப் ஹீரோக்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதையே கவுரவ குறைச்சலாக நினைப்பார்கள். வேறு வழியில்லாமல் உறுப்பினராக சேர்ந்தாலும் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் பங்கேற்க மாட்டார்கள். ரஜினி, கமல், விஜய், அஜீத்தெல்லாம் நடிகர் சங்க தேர்தலுக்கு ஓட்டளிக்க வருவதோடு சரி. மற்றபடி அந்தப் பக்கம் தலைகாட்ட மாட்டார்கள். ஆனால் வளர்ந்து வரும் நடிகரான சிவகார்த்திகேயன் சின்னத்திரை நடிகர் சங்கத்தில் நிரந்தர உறுப்பினராகியிருக்கிறார். இதற்கான சந்தாவை செலுத்தி உறுப்பினர் அட்டை பெற்றிருக்கிறார்.
"என் தாய்வீடு சின்னத்திரைதான். சின்னத்திரைதான் என் திறமையை அங்கீகரித்ததோடு அதனை சினிமாவுக்கும் கொண்டு சென்றது. சின்னத்திரை நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருப்பதிலும், அதற்காக உழைப்பதிலும் பெருமைப்படுகிறேன். என்னை சின்னத்திரை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம்" என்கிறார் சிவகார்த்திகேயன்.
"சிவகார்த்திகேயன் சின்னத்திரை என் தாய்வீடுன்னு சொன்னது எங்களுக்கு பெருமையாக இருக்கிறது. அவர் உறுப்பினர் ஆனதில் எந்த ஆச்சர்யமும் இல்லை. டி.வி, சினிமா இரண்டுமே ஒரே குடும்பத்தில் பிறந்த பிள்ளைகள்" என்கிறார் சின்னத்திரை நடிகர் சங்கத் தலைவி நளினி.