பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை | 'லயன் கிங்' அடுத்த பாகம் தயாராகிறது: டிசம்பரில் ரிலீஸ் | ரசவாதியில் சித்த வைத்தியரின் கதை : சாந்தகுமார் | எம்.ஜி.ஆர் மாதிரி செயல்படுவேன்: 10 டிராக்டர் வழங்கி ராகவா லாரன்ஸ் பேச்சு | தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' |
சின்னத்திரை, பெரிய திரை இரண்டிலும் அறிந்த முகம் நீலிமா ராணி. சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து அதன் பிறகு சின்னத்திரை, பெரிய திரை என்று மாறி மாறி பயணித்துக் கொண்டிருப்பவர். இப்போதும் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார், வாணி ராணி தொடரில் நடிக்கிறார். ஒரு நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
நீலிமாவின் தந்தை விஸ்வமோகன் தமிழில் ராஜேஷ்குமார் மாதிரி தெலுங்கில் துப்பறியும் எழுத்தாளர் என்பது பலருக்குத் தெரியாது. 300க்கும் மேற்பட்ட கதைகளும், 100க்கும் மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். எழுத்தாளர் மகள் எழுத்தாளராகாமல் இருப்பாரா. நீலிமாவும் நிறைய கதைகள் எழுதிக் கொண்டிருக்கிறார். அதை தொகுத்து ஒரு புத்தகமாக போடவும் முடிவு செய்திருக்கிறார். நீலிமா எழுதுவது தெலுங்கு கதையல்ல தமிழ் கதைகள். இதுதவிர சில ஆங்கில இதழ்களில் தன்னம்பிக்கை கட்டுரைகளையும் எழுதி வருகிறார். ஒரு படத்துக்கு கதை எழுதி சீக்கிரமே இயக்குனராக அவதாரம் எடுத்தாலும் ஆச்சர்யம் இல்லை.