‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட நடிகை ஸ்வேதாபாசு, சினிமாவில் வருமானம் இல்லாததால் தான் அந்த தொழிலுக்கு தள்ளப்பட்டதாக கூறியிருந்தார். அதற்கு நடிகை குஷ்பு எதிர்ப்பு தெரிவித்தார். அதாவது, சினிமாவில் வாய்ப்பு இல்லை என்றால் டி.வியில் நடிக்கலாம். இல்லையேல் வேறு ஏதாவது வேலை செய்து சம்பாதிக்கலாம். அதையெல்லாம் விட்டு விட்டு பாலியல் தொழிலுக்கு சென்றேன் என்று ஸ்வேதாபாசு கூறுவது தவறானது என்று தனது கருத்தை சொல்லியிருந்தார்.
ஆனால், இப்போது சீரியல்களில் நடித்து வரும் சாக்ஷி என்ற நடிகை ஸ்வேதாபாசுவுக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்தியில், ஸ்வேதாபாசு பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டபோது அவரது புகைப்படத்தை மட்டுமே போலீசார் வெளியிட்டனர். ஆனால், அவருடன் இருந்த அந்த தொழிலதிபரது பெயரையோ, போட்டோவையோ இதுவரை வெளியிடவில்லை. மேலும், ஸ்வேதாபாசுவை காப்பாகத்தில் வைத்திருப்பதாக கூறிய போலீசார், அவரது அம்மாவைகூட பார்ப்பதற்கு அனுமதிக்காதது வேதனையானது.
மேலும், ஸ்வேதாபாசுவை ஒரு கிரிமினல் போன்று களங்கப்படுத்துகிறார்கள். ஒரு கொலைகாரனுக்கு கொடுக்கும் உரிமையைகூட ஸ்வேதாவுக்கு கொடுக்கவில்லை என்றும் காவல்துறைக்கு எதிராக கருத்து வெளியிட்டுள்ளார்.