போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தேவர் மகன், பாண்டவர் பூமி, விரும்புகிறேன் படங்களில் குழந்தை நட்சதிரமாக நடித்த நீலிமா ராணி. மெட்டி ஒலி மூலம் சின்னத்திரைக்கு வந்தார். கோலங்கள், தென்றல், செல்லமே ஆகிய தொடர்களில் நடித்தார். இடையில் இதய திருடன், மொழி, திமிரு, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல படங்களில் ஹீரோயின்களின் தோழியாக நடித்தார். அதன் பிறகு திருமணம் செய்து கொண்டு சின்னத்திரை, பெரிய திரைக்கு குட்பை சொல்லிவிட்டு ஒதுங்கினார்.
பின்னர் திடீரென்னு உடம்மை ஸ்லிம்மாக்கி ஹீரோயினாக நடிக்கப்போகிறேன் என்று வந்தார். வந்தவருக்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பண்ணையாரும் பத்மினியும் படங்களில் கேரக்டர் ரோல்கள்தான் கிடைத்தது. இப்போது அமளி துமளி, இருவர் உள்ளம், வாலிபராஜா படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி விட்டார் நீலிமா ராணி. இதுபற்றி நீலிமாராணி கூறியிருப்பதாவது: ராதிகா மேடம் அழைத்ததால் சின்னத்திரைக்கு மீண்டும் வந்திருக்கிறேன். காரணம் நான் சின்னத்திரையில் பெரிய இடத்தை பிடித்ததற்கு அவர் கொடுத்த வாய்ப்புகள்தான் காரணம். நான் இதுவரை சீரியல்களில் வில்லியாகத்தான் நடித்திருக்கிறேன். முதன் முறையாக பாசிட்டிவான கேரக்டரில் நடிக்கிறேன். ஒன்றை தொலைத்து விட்டு அதை தேடி அலையும் பெண் கேரக்டர். என்ன தொலைத்தேன். தொலைத்ததை கண்டுபிடித்தேனா என்பதை அடுத்து வரும் எபிசோட்களில் தெரிய வரும். சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். என்கிறார் நீலிமா.