‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
புராண தொடர்களை ஒளிபரப்புவதற்கு தொலைக்காட்சிகள் அதிக ஆர்வம் காட்டுகிறது. காரணம் மக்கள் அதற்கு அளித்து வரும் அமோக ஆதரவு. மகாபாரத தொடரை இரண்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்பி வருகிறது. நாயன்மார்கள் வரலாற்றை ஒரு தொலைக்காட்சி ஒளிபரப்புகிறது. அந்த வரிசையில் இப்போது கேப்டன் டி.வியும் இணைந்திருக்கிறது.
ஷீரடி ஜெய் சாய்பாபா என்ற பக்தி வரலாற்று நிகழ்ச்சியை ஒளிபரப்புகிறது. பல்வேறு துன்பங்களில் கிடந்து தவிக்கும் மக்களை பகவான் சாய்பாபாவின் அருள் எப்படி அதிலிருந்து மீட்கிறது என்கிற கதைகளோடு சாய்பாபாவின் வரலாற்று கதையும் இணைத்து சொல்லப்படுகிறது. அதனுடன் பாபா சொன்ன ஹரி கதைகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது
சாய்பாபாவாக ஸ்ரீநிவாச ரெட்டி நடிக்கிறார். மனோரமா, சுபலேகா சுதாகர், சுமன், சத்யப்பரியா, விஜய் பாபு ஆகியோரும் நடிக்கிறார்கள். திங்கள் முதல் வெள்ளிவரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.