சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
தொலைக்காட்சி தொடர்களை விரும்பி பார்க்கிறவர்களுக்கு கே.எஸ்.ஜி வெங்கடேஷ் நல்ல அறிமுகமானவர். பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன். அவர் இயக்கிய அத்தைமடி மெத்தையடி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் நடித்தவர். போதிய வாய்ப்புகள் இன்றி சின்னத்திரைக்கு வந்தார்.
தற்போது வெளியாகி நல்ல வரவேற்புடன் ஓடிக் கொண்டிருக்கும் சதுரங்க வேட்டை படத்தில் கிரானைட் அதிபராக நடித்திருந்தார். அவரது நடிப்பை எல்லோரும் வெகுவாக பாராட்டுகிறார்கள். வாய்ப்புகளும் வருகிறது. அதனால் இனி சினிமாவில் தொடர்ந்து நடிக்க இருக்கிறார்.
இதுபற்றி அவர் கூறியதாவது: அப்பாதான் என்னை ஹீரோவாக அறிமுகப்படுத்தினார் அதன் பிறகு தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் 25 படங்கள் வரை நடித்தேன். அதன் பிறகு சின்னத்திரைக்கு வந்து விட்டேன். 20 சீரியல்களுக்கு மேல் சுமார் 2 ஆயிரத்து 500 எபிசோட்களில் நடித்திருக்கிறேன்.
சதுரங்க வேட்டை வாய்ப்பு கிடைத்தது. ஒரு படம்தானே என்று ஒரு மாறுதலுக்காக நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இனி தொடர்ந்து சினிமாவில் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். வில்லன் கேரக்டர்கள் அதிகமாக வருகிறது. வில்லனாக நடிப்பதில் எனக்கு பிரச்னை எதுவும் இல்லை, நடிக்க தயார் என்கிறார் வெங்கடேஷ்.