22 ஆண்டுகளுக்கு முன்பு நடிகராக அறிமுகம் : இப்போது இயக்குனராக அறிமுகம் | மீண்டும் இலங்கைத் தமிழர் கதாபாத்திரத்தில் சசிகுமார் : மீண்டும் வெற்றி கிடைக்குமா ? | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பிரிவா... உண்மையில் நடப்பது என்ன? | ‛ஐ லவ் யூ' சொன்ன சக மாணவன் : முதல் காதலை பகிர்ந்த அனுஷ்கா | ராஜமவுலி படத்தில் மகேஷ் பாபுவுக்கு அப்பாவாகும் மாதவன் | சிரஞ்சீவி மாதிரி ஆகி விடக்கூடாது : விஜய்க்கு ரோஜா கொடுத்த அட்வைஸ் | 25 மடங்கு அதிக சம்பளம் கேட்கும் ரிஷப் ஷெட்டி ? | வினோத் - தனுஷ் கூட்டணி : உறுதி செய்த சாம் சிஎஸ் | ஐஎம்டிபி - டாப் 10 பட்டியலில் 3 தமிழ்ப் படங்கள் | ஹேக் செய்யப்பட்ட உன்னி முகுந்தன் இன்ஸ்டாகிராம் : ரசிகர்களுக்கு எச்சரிக்கை |
தற்போது வலிமை படத்தை இயக்கி வரும் எச்.வினோத் இயக்கிய படம் சதுரங்க வேட்டை. இந்த படம் பெரிய வெற்றியை பெற்றது. இதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் தயாரானது. அரவிந்த் சாமி, த்ரிஷா, பிரகாஷ் ராஜ், , ராதா ரவி, நாசர், சாந்தினி, ஸ்ரீமன், மனோபாலா, குமரவேல், இ.ராமதாஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். எச். வினோத்தின் கதையை சலீம் படத்தை இயக்கிய நிர்மல்குமார் இயக்கி இருந்தார். காமெடி நடிகர் மனோபாலா தயாரித்திருந்தார்.
இந்த படம் பல பிரச்சினைகள் காரணமாக முடங்கி கிடந்தது. தற்போது இதனை ஆன்ஸ்கை டெக்னாலஜி என்ற நிறுவனத்தின் சார்பில் முத்து சம்பந்தம் வாங்கி வெளியிடுகிறார். இவர் தற்போது 2030 என்ற படத்தை தயாரித்து வருகிறார்.
படத்தை வெளியிடுவது தொடர்பாக அவர் கூறியதாவது: சதுரங்க வேட்டை இந்திய திரைத்துறையில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்று. இதன் இரண்டாம் பாகம் சதுரங்க வேட்டை 2 வெளிவருவதைப் பற்றி கேள்விப்பட்டபோது, மிகமிக மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக, அரவிந்த் சாமி மற்றும் த்ரிஷா போன்ற முன்னணி நடிகர்கள் நடிப்பில் காட்சிகளை கண்டபிறகு, என்னுள் மிகப்பெரும் ஆர்வம் குடிகொண்டது.
எதிர்பாராத சூழ்நிலைகளால் படம் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிப்பதைப் பார்த்து, நான் பெரிதும் ஏமாற்றமடைந்தேன். தற்போது சதுரங்க வேட்டை 2 படத்தை எங்கள் நிறுவனம் மூலம் வெளியிட முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். படத்தை வெளியிட ஏதுவாக பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளன, மேலும் ஜனவரி 2022ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டிருக்கிறோம். என்றார்.