‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சின்னத்திரை நடிகர் சங்கம் நலிந்த சின்னத்திரை கலைஞர்களின் நல்வாழ்விற்கு நிதி திரட்டுவதற்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி ஒன்றை நடத்துகிறது. ஹெல்ப்பிங் ஆர்ட்ஸ் பவுண்டேஷன் அமைப்புடன் இணைந்து நடத்தும் இந்த போட்டி வருகிற ஆகஸ்ட் 17ந் தேதி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடக்கிறது. இதில் சின்னத்திரை நடிகர்கள் ஒரு அணியாகவும், பெரிய திரை நட்சத்திரங்கள் ஒரு அணியாகவும் மோதுகிறார்கள்.
இதற்கான அணிகள் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இதில் பெரிய திரை நட்சத்திரங்களுக்கு நீல நிற உடையும், சின்னத்திரை நடிகர்களுக்கு சிகப்பு நிற உடையும் விளையாட்டு சீருடையாக அறிமுகப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி, சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் எம்.ராஜேந்திரன், செயலாளர் ராஜ்காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பெரிய திரை அணியில் வெங்கட்பிரபு, ஷாம், பரத், எஸ்.பி.பி.சரண், சாந்தனு, ப்ருத்வி, நிதின் சத்யா, மகேந்திரன், உதய், சஞ்சீவ், அனூப், ஆதவ், விஷ்ணுவர்த்தன், அசோக் ஆகியேர் விளையாடுகிறார்கள்.