போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
டில்லி மாணவிக்கு ஓடும் பஸ்ஸில் நடந்த பாலியல் வன்முறைக் கொடுமையை யாரும் மறந்திருக்க முடியாது. நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் வேதனை வடு மறைவதற்குள், சென்னையைச் சேர்ந்த பெண் பொறியாளர் ஒருவரும் கயவர்களின் கொடுமைக்குப் பலியானார். இதுபோன்ற கொடூரங்கள் நடக்கும் போதெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்தப்படுகிறது. அதனால் பெரும்பாலான சம்பவங்கள் யாருக்கும் தெரியாமல் மறைக்கப்படுகின்றன. இந்த பாலியல் வன்முறை சம்பவத்தின் அடிப்படையாகக் கொண்டு, 'அரங்கேற்றம்' மெகா தொடரை வழங்குகிறார் இயக்குனர் சுரேஷ்கிருஷ்ணா.
காண்பவரை சுண்டியிழுக்கும் அழகியான விஜயலட்சுமி ஒரு பிரபல கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பணி புரிகிறார். இளமைத் துள்ளலுடன் சுதந்திரப் பறவையாக சுற்றித் திரிந்த விஜயலட்சுமிக்குத் திருமணம் நடக்கிறது. இல்லற வாழ்வில் நுழையும் ஆனந்தக் கனவுகளுடன் இருந்த விஜயலட்சுமியை, திடீரென நான்கு ஆண் மிருகங்கள் கடித்துக் குதறுகின்றன. பாலியல் வன்முறைக்கு ஆளான அவலத்தில் கூனிக்குறுகிப் போகிறார் விஜயலட்சுமி.
பாதிக்கப்பட்டவளையே குற்றவாளியாகப் பார்க்கும் சமூகத்தைக் கண்டு அதிர்ச்சியடைகிறார். நடந்த சம்பவத்திற்கு தான் எந்த வகையிலும் பொறுப்பு இல்லை என்பதையும் இந்த சம்பவத்திற்கு அவமானப்படவேண்டியது இந்த சமூகம்தான்தான் என்று உணர்கிறார். தன் மீது சுமத்தப்படும் விமர்சனங்களை எதிர்த்து, பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக கொதித்து எழுகிறாள் விஜயலட்சுமி. தன்னை இழிநிலைக்கு ஆளாக்கிய கயவர்களுக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்கவும், இனி எந்தப் பெண்ணுக்கும் அநீதி நிகழக்கூடாது எனவும் அறப்போராட்டத்தைத் தொடங்குகிறாள்.