இனி டாக்டர் ஸ்ரீலீலா | ‛ஓ பட்டர்பிளை' படத்திற்கு ‛மூன்று முடிச்சு' என தலைப்பு வைக்க நினைத்த இயக்குனர் | ரவி மோகனுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது : பாடகி கெனிஷா வெளியிட்ட தகவல் | சிரஞ்சீவியின் ‛விஸ்வாம்பரா' பார்வையாளர்களை திகைக்க வைக்கும் : இயக்குனர் வசிஷ்டா | மருத்துவமனையில் நடிகை விசித்ரா வெளியிட்ட பதிவு | வெங்கடேஷ் படத்தில் இணையும் கதாநாயகிகள் யார் | ரஜினி படத்துடன் மோதுகிறது சூர்யா 47 படம் | சர்வம் டெலுலு எப்படி சர்வம் மாயா ஆனது : இயக்குனர் பகிர்ந்த சுவாரஸ்யம் | இரவில் ரஜினி உடன் பைக் ரைட் : ராதிகா சொன்ன பிளாஷ்பேக்... | 100 ஆண்டுக்கு அப்புறம் தான் ரிலீஸ்; ஆனா இப்பவே படம் 'ரெடி': ஹாலிவுட்டில் புது கூத்து! |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் தொடரிலிருந்து அதன் இயக்குநர் பிரதாப் மணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சித்து, ஸ்ரேயா அஞ்சன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. விறுவிறுப்பான திரைக்கதையுடன் டிஆர்பியிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இந்த தொடரை இயக்குநர் பிரதாப் மணி என்பவர் இயக்கி வந்தார்.
இவர் நடிகர்களிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையுடன் பிரச்னை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகத்தினர் பிரதாப்பை அதிரடியாக சீரியலை விட்டு நீக்கியுள்ளனர். பிரதாப்பிற்கு பதிலாக இயக்குநர் ஜீவா தான் வள்ளியின் வேலன் தொடரை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.




