மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை | நான் அடிக்கடி ரசிக்கும் காமெடி எது தெரியுமா? ஆர்.கே. செல்வமணி | இந்த வாரம் ரிலீஸ் ஆகும் படங்களுக்குள் இவ்வளவு ஒற்றுமையா? |
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வள்ளியின் வேலன் தொடரிலிருந்து அதன் இயக்குநர் பிரதாப் மணி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். சித்து, ஸ்ரேயா அஞ்சன் நடிப்பில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பாக ஆரம்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் தொடர் 'வள்ளியின் வேலன்'. விறுவிறுப்பான திரைக்கதையுடன் டிஆர்பியிலும் நல்ல முன்னேற்றம் கண்டு வரும் இந்த தொடரை இயக்குநர் பிரதாப் மணி என்பவர் இயக்கி வந்தார்.
இவர் நடிகர்களிடம் மிகவும் மோசமான முறையில் நடந்து கொள்வதாகவும், ஒருமையில் பேசுவதாகவும் ஏற்கனவே புகார் எழுந்த நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் ஒரு நடிகையுடன் பிரச்னை செய்துள்ளதாக தெரிய வருகிறது. இதனால் அதிருப்தியடைந்த நிர்வாகத்தினர் பிரதாப்பை அதிரடியாக சீரியலை விட்டு நீக்கியுள்ளனர். பிரதாப்பிற்கு பதிலாக இயக்குநர் ஜீவா தான் வள்ளியின் வேலன் தொடரை இயக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.