தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

டிக் டாக் பிரபலமான ஷோபனா, விஜய் டிவியில் ஒளிபரப்பான ‛முத்தழகு' சீரியலின் மூலம் நடிகையாக அறிமுகமானார். இந்த தொடர் இவருக்கு அதிக அளவில் பெயர் புகழை பெற்று தந்ததுடன் ஏராளமான ரசிகர் கூட்டத்தையும் கொடுத்துள்ளது. இந்நிலையில், முத்தழகு தொடர் அண்மையில் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து விஜய் டிவியிலேயே ‛பூங்காற்று திரும்புமா' என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.
சின்னத்திரையில் ஷோபனாவுக்கான மார்க்கெட் அதிகரித்து வருவதையடுத்து தற்போது அவர் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‛மீனாட்சி' என்கிற தொடரிலும் ஹீரோயினாக நடிக்க கமிட்டாகியிருக்கிறார் என்ற தகவல் சின்னத்திரை வட்டாரங்களில் கசிந்துள்ளது. இதனால் மகிழ்ச்சியடைந்துள்ள ஷோபானவின் ரசிகர்கள், ஷோபனாவின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.




