பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

நடிகை ஷோபனா திரையுலகில் நுழைந்து கிட்டத்தட்ட 40 வருடங்களாக தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழ், மலையாளம், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்துள்ள அவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சமீபத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான தொடரும் படத்தில் அவருக்கு ஜோடியாக கதாநாயகியாக நடித்திருந்தார். படத்தில் அவரது நடிப்புக்கு ரசிகர்களின் பாராட்டுக்கள் வெகுவாக கிடைத்தது. படமும் மிகப்பெரிய வெற்றி அடைந்து 200 கோடிக்கு மேல் வசூலித்தது. இந்த சந்தோஷத்தில் இருந்த ஷோபனாவுக்கு தற்போது அவரது சிறு வயது தோழியான அனிதாவின் மரணம் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிறுவயதிலேயே கேரளாவில் இருந்து சென்னை மயிலாப்பூருக்கு பெற்றோருடன் ஷோபனா குடிபுகுந்த போது, அவரது பக்கத்து வீட்டில் வசித்தது தான் அனிதா மேனனின் குடும்பம். ஷோபனாவை விட மூன்று வயது குறைவு என்றாலும் கூட இருவரும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்து வந்தனர். ஷோபனா சினிமாவில் பிசியான காலகட்டத்தில் கூட அனிதாவுடன் நட்பை காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக அனிதா மேனன் மறைந்தது மிகப்பெரிய வருத்தத்தை ஷோபனாவுக்கு ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட சிறு வயது புகைப்படங்களை தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள ஷோபனா, அனிதா மேனனுக்கு தன்னுடைய இரங்கலையும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார்.




