தமிழுக்கு வரும் சப்தமி கவுடா | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் | லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படப்பிடிப்பு நிறைவு | ஜனநாயகன் சென்சார் விவகாரம் : இனியாவது வாயை திறப்பாரா விஜய்? | சூரி சொன்ன 'மண்டாடி' கதை | தந்தைக்கு எதிராக வெறுப்பு பேச்சு : கதீஜா ரஹ்மான் கோபம் | ஒரே நேரத்தில் தயாராகும் 34 படங்கள் | பிளாஷ்பேக் : 5 நாளில் படமாக்கப்பட்ட 'பாசம் ஒரு வேசம்' |

தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், குணச்சித்திர நடிகர் என அனைத்து பரிணாமங்களிலும் கலக்கியவர் பாண்டியராஜன். இயக்குநரான ஆரம்பகாலக்கட்டத்தில் கன்னி ராசி, ஆண்பாவம், நெத்தியடி என சில ஹிட் படங்களை கொடுத்தார். அதன் பின் எடுத்த படங்கள் பெரிய அளவில் ஹிட்டாக நிலையில், ஹீரோவாக களமிறங்கினார். தற்போது குணச்சித்திர நடிகராக சினிமாவில் நடித்து வரும் பாண்டியராஜன் கடந்த சில வருடங்களாகவே சீரியல்களிலும் என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் பாக்கியலெட்சுமி, மாரி ஆகிய தொடர்களில் கெஸ்ட் ரோல்களில் நடித்திருந்த பாண்டியராஜன் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் வீரா தொடரில் நீதிபதியாக நடித்துள்ளார். பாண்டியராஜனின் என்ட்ரி ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.




