அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
கேரளாவை சேர்ந்த அணிலா ஸ்ரீகுமார் தமிழில் முதன்முதலில் நடிக்க வரும்போது பலரும் நெகட்டிவாக பேசியிருந்தார்களாம். ஆனால், அதையெல்லாம் தகர்த்து அணிலாவின் நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும், இவர் தெலுங்கு மொழியிலும் ஒரு சீரியல் நடித்து வருகிறார். அண்மையில், பேட்டி ஒன்றில் பேசிய அணிலா, தனது சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தனது ஏக்கத்தை சொல்லியிருந்தார். மேலும், மாதத்திற்கு 30 நாட்கள் தான் இன்னும் 10 நாட்கள் இருந்தால் இன்னொரு சீரியல் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது இரண்டு ஆசைகளும் நிறைவேறும் வகையில் புதிய சீரியலில் அதுவும் அவரது சொந்த மொழியான மலையாளத்தில் 'பவித்ரம்' என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது ஆசைப்படியே தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் அணிலா நடிகையாகிவிட்டார். அதேசமயம் இந்த மூன்று சீரியல்களில் ஏதாவது ஒன்றிலிருந்து விலகுவீர்களா என ரசிகர்கள் கமெண்டுகளில் கேட்டிருந்த நிலையில், கண்டிப்பாக மூன்று சீரியல்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.