ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
கேரளாவை சேர்ந்த அணிலா ஸ்ரீகுமார் தமிழில் முதன்முதலில் நடிக்க வரும்போது பலரும் நெகட்டிவாக பேசியிருந்தார்களாம். ஆனால், அதையெல்லாம் தகர்த்து அணிலாவின் நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும், இவர் தெலுங்கு மொழியிலும் ஒரு சீரியல் நடித்து வருகிறார். அண்மையில், பேட்டி ஒன்றில் பேசிய அணிலா, தனது சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தனது ஏக்கத்தை சொல்லியிருந்தார். மேலும், மாதத்திற்கு 30 நாட்கள் தான் இன்னும் 10 நாட்கள் இருந்தால் இன்னொரு சீரியல் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது இரண்டு ஆசைகளும் நிறைவேறும் வகையில் புதிய சீரியலில் அதுவும் அவரது சொந்த மொழியான மலையாளத்தில் 'பவித்ரம்' என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது ஆசைப்படியே தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் அணிலா நடிகையாகிவிட்டார். அதேசமயம் இந்த மூன்று சீரியல்களில் ஏதாவது ஒன்றிலிருந்து விலகுவீர்களா என ரசிகர்கள் கமெண்டுகளில் கேட்டிருந்த நிலையில், கண்டிப்பாக மூன்று சீரியல்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.