விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
கேரளாவை சேர்ந்த அணிலா ஸ்ரீகுமார் தமிழில் முதன்முதலில் நடிக்க வரும்போது பலரும் நெகட்டிவாக பேசியிருந்தார்களாம். ஆனால், அதையெல்லாம் தகர்த்து அணிலாவின் நடிப்பு தமிழ் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறது. மேலும், இவர் தெலுங்கு மொழியிலும் ஒரு சீரியல் நடித்து வருகிறார். அண்மையில், பேட்டி ஒன்றில் பேசிய அணிலா, தனது சொந்த மொழியான மலையாளத்தில் நடிக்க ஆசைப்படுவதாக தனது ஏக்கத்தை சொல்லியிருந்தார். மேலும், மாதத்திற்கு 30 நாட்கள் தான் இன்னும் 10 நாட்கள் இருந்தால் இன்னொரு சீரியல் நடிப்பேன் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் அவரது இரண்டு ஆசைகளும் நிறைவேறும் வகையில் புதிய சீரியலில் அதுவும் அவரது சொந்த மொழியான மலையாளத்தில் 'பவித்ரம்' என்கிற தொடரில் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவரது ஆசைப்படியே தமிழ், மலையாளம், தெலுங்கு என மூன்று மொழிகளிலும் அணிலா நடிகையாகிவிட்டார். அதேசமயம் இந்த மூன்று சீரியல்களில் ஏதாவது ஒன்றிலிருந்து விலகுவீர்களா என ரசிகர்கள் கமெண்டுகளில் கேட்டிருந்த நிலையில், கண்டிப்பாக மூன்று சீரியல்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்று பதிலளித்துள்ளார்.