'பெத்தி' படத்திலிருந்து வெளியேற நினைத்தேன் ; சிவராஜ்குமார் நெகிழ்ச்சி | 'திரிஷ்யம்' நடிகை புகாரின் பேரில் சக நடிகை விசாரணைக்கு ஆஜராக உத்தரவு | கொச்சியில் நடைபெற்ற ஆஷா சரத் இளைய மகள் நிச்சயதார்த்தம் | பிளாஸ்ட் : 25 கோடி வசூல் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கருப்பு : வெளியீட்டிற்கு முன்பு 'டெபிசிட்', பின்பு 'பிராபிட்' | 'மோலிவுட் டைம்ஸ்' படத்தில் மீண்டும் அசத்துவார்களா பிரேமலு பிரண்ட்ஸ்? | ஜூன் 25ல் திரைக்கு வரும் ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | பிளாஷ்பேக்: இயக்குநர் ஏ எஸ் ஏ சாமிக்கு வண்ணத்திரை வாய்ப்பை வழங்கிய வானொலி நாடகம் | ரசிகர்கள் எங்களுக்கு தெய்வம் போன்றவர்கள் : பூஜா ஹெக்டே | ஆடை குறித்து நடிகை பரீனாவின் பளிச் பதில் |

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசனுக்கு கிடைத்த மாபெரும் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் ஸ்டாலின் முத்து, நிரோஷா, ராஜ்குமார் மனோகரன், வெங்கட் ரெங்கநாதன், வீஜே கதிர், சரண்யா துராடி, ஷாலினி, ஹேமா ராஜ்குமார் என பெரிய பட்டாளமே நடித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராஜி என்கிற முக்கிய கதபாத்திரத்தில் நடித்து வரும் ஷாலினி சீரியலை விட்டு விலக இருப்பதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தது. இதனால் ரசிகர்களும் குழப்பமடைந்தனர்.
இதுகுறித்து தற்போது விளக்கமளித்துள்ள ஷாலினி, 'நான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரிலிருந்து விலகப்போவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. அது முற்றிலும் பொய். எதற்காக இப்படி வதந்திகள் பரப்புகிறார்கள் என்று தெரியவில்லை.நான் உங்கள் ராஜியாக தொடர்வேன். வதந்திகளை பரப்பாதீர்கள்' என பதிவிட்டுள்ளார்.




