சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் | சிவராஜ்குமார் படம் மூலமாக கன்னடத்தில் நுழைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | 4 வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாக நடித்த கவுரி கிஷன் | பிளாஷ்பேக் : புறக்கணித்த கதையை ஹிந்தியில் ரீமேக் செய்த ஏவிஎம் | காதலியை திருமணம் செய்தார் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகாவுக்கு 'பைசன்' படக்குழு 10 லட்சம் நிதி | மஹாகாளியாக மாறும் பூமி ஷெட்டி |

கலைஞர் டி.வி.யில் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த 'கண்ணெதிரே தோன்றினாள்' தொடர் இன்றுடன் முடிவடைகிறது. இதை தொடர்ந்து வருகிற திங்கள் முதல் (4ம்தேதி) 'பவித்ரா' என்கிற புதிய தொடர் ஒளிபரப்பாக இருக்கிறது. இரவு 7 மணி முதல் 9 மணி வரை 2 மணிநேரம் சிறப்பு எபிசோட்டுடன் இந்த தொடர் ஆரம்பமாகிறது.
சின்னத்திரையில் இருந்து சினிமாவுக்கு சென்ற அனிதா சம்பத் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி வந்து நடிக்கும் முதல் தொடர். அவரது ஜோடியாக பாடலாசிரியர் சினேகன் நடிக்கிறார். பிரபல தொழிலதிபர் ரமா தேவிக்கு கிருஷ்ணா, பவானி, ஜோதி ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில் கிருஷ்ணா, சரிகாவை மணக்கிறார். சரிகாவின் அண்ணன் வேணுவுக்கு பவானியை மணம் முடித்து கொடுக்க ரமா தேவி விரும்பும் நிலையில், தனது வீட்டாரை எதிர்த்து தான் காதலித்த டிரைவர் பாரதியை, பவானி திருமணம் செய்து கொள்கிறார். அதன்பிறகு குடும்பத்திலும், காதலிலும் என்ன நடக்கிறது. ஜோதியின் நிலை என்ன என்பது தான் தொடரின் கதை.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            