காலையில் தெலுங்கு முறைப்படி, மாலையில் கொடவா முறைப்படி…விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா திருமணம் | சிம்புவை வைத்து வரலாற்று படத்தை திட்டமிட்ட ராஜூ முருகன்! | சம்பளத்தை அதிரடியாக உயர்த்திய பிரதீப் ரங்கநாதன்! | திருமணத்தை நம்ப முடியவில்லை : அமலாபால் ஓபன் டாக் | ஜி.வி.பிரகாஷின் 'மென்டல் மனதில்' படத்தின் முதல் லிரிக்கல் வீடியோ வெளியானது! | சிவகார்த்திகேயன் அம்மாவாக ரம்யா நம்பீசன் | சினிமா இயக்குவதை மறந்துவிட்டேனா? நடிகர் சமுத்திரக்கனி பதில் | மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன பாரதிராஜா : வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் | ரஜினிகாந்த், சிபி படத்தில் இணையும் பசில் ஜோசப், பிரியங்கா மோகன் | 'தாய் கிழவி' பார்த்துவிட்டு அக்கா ராதிகாவை கட்டிபிடித்து அழுதது ஏன்? நடிகை நிரோஷா |

பிக்பாஸ் சீசன்- 8 நிகழ்ச்சி கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் முதல் நாளிலேயே சாச்சனா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார். அதோடு இந்த முறை ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் நாளில் நாற்காலி, யார் காலி என்ற தலைப்பில் ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அப்போது அந்த விளையாட்டில் ஓடிய தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகருக்கு காலில் அடிபட்டது. நடக்க முடியாத நிலையில் இருந்த அவரை கை தாங்கலாக போட்டியாளர்கள் அழைத்து சென்று அமர வைத்தார்கள். அதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்னொரு போட்டியாளரான சீரியல் நடிகர் தீபக்கிற்கும் அதே போன்று காலில் வலி ஏற்பட்டுள்ளது. அவரையும் ரவீந்திரனை போலவே 2 சக போட்டியாளர்கள் அழைத்து செல்லும் வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால் அதைப்பார்த்து உண்மையிலேயே அவர்களுக்கு காலில் அடிபட்டதா? இல்லை ஆரம்பத்திலேயே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஒரு பரபரப்பை ஏற்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறதா? என்று நெட்டிசன்கள் பலரும் சோசியல் மீடியாவில் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.




