பாரத், சான்வீயின் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது | சிரஞ்சீவி படத்தில் நடிக்க இளம் நடிகைகளிடம் பேச்சுவார்த்தை | இம்மார்ட்டல் படம் குறித்து பகிர்ந்த இயக்குனர் | 'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது |

சின்னத்திரை நடிகரான தீபக் பார்ப்பதற்கு இப்போதும் இளமையாக எனர்ஜிடிக்காகவும், பிட்டாகவும் இருந்து வருகிறார். நீண்ட இடைவேளைக்கு பின் சீரியலில் ‛தமிழும் சரஸ்வதியும்' தொடரின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்து நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வபோது அப்டேட் வெளியிட்டு வரும் தீபக் தற்போது தனது குடும்பத்துடன் ரிஸ்க்கான யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதில், தீபக் தனது மனைவி ரஞ்சனி மற்றும் மகன் அக்னித்துடன் ரோப்பில் ஒன்றாக சேர்ந்து தொங்கியவாறு ரிஸ்க்கான யோகாசனங்களை செய்துள்ளார். ஒரு புகைப்படத்தில் ரஞ்சனி தலைகீழாகவும் மற்றொரு புகைப்படத்தில் தீபக் தலைகீழாகவும் யோகாசனம் செய்துகாட்டுகின்றனர். மூன்றாவது புகைப்படத்தில் தீபக் ரஞ்சனியுடன் அவரது மகனும் ஒரே ரோப்பில் தீபக்கின் தோள்களில் ஏறி உட்கார்ந்து யோகாசனம் செய்கிறார். இந்த புகைப்படங்களானது சோஷியல் மீடியாவில் வைரலாக தீபக் மற்றும் அவரது குடும்பத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.