உண்மை எப்போதும் வெல்லும் : ஆர்த்தி பதிவு; குஷ்பு ஆதரவு | விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா |

சின்னத்திரை நடிகர்கள் விஷ்ணுகாந்த்-சம்யுக்தா விவகாரம் தொடர்ந்து சோஷியல் மீடியாக்களிலும் செய்தி ஊடகங்களிலும் பேசுபொருளாகி வருகிறது. இந்நிலையில், அண்மையில் குடும்பத்துடன் பேட்டி அளித்த சம்யுக்தா தனது கணவர் விஷ்ணுகாந்த் தன்னை செக்ஸ் டார்ச்சர் செய்ததாக புகார் கூறினார். இதனையடுத்து நேற்று லைவ்வில் வந்த விஷ்ணுகாந்த் சம்யுக்தாவுக்கு அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பி எச்சரித்துள்ளார். அவர், 'நீங்க 4 பேர் கூட மாறி மாறி ரிலேஷன்ஷிப்ல இருந்துருக்கீங்க. ஒருத்தரை பிடிக்கலைன்னா அவங்கள கழட்டிவிட்டுட்டு அடுத்த ஆள்கிட்ட அவர் என்கிட்ட மிஸ்பிகேவ் பண்ணதா சொல்லி நடிச்சிருக்கீங்க. நீங்க ஏமாத்துறது அவங்களுக்கு தெரிஞ்சு தான் அவங்க உங்கள பத்தி விஷயமெல்லாம் ரெக்கார்ட் பண்ணி வச்சிருக்காங்க.
மியூச்சுவலா ரிலேஷன்ஷிப்ல இருக்கும் போது உங்களுக்கு எல்லாம் நல்லா இருக்கு. உங்களுக்கு பிடிக்கலேன்னா அவங்க எல்லோரும் மிஸ்பிகேவ் செஞ்சதா சொல்லுவீங்களா?. என் விசயத்தில உங்களால அப்படி சொல்ல முடியல. நான் உங்கள கல்யாணம் பண்ணிட்டேன். அதனால தான் நமக்குள்ள இருந்த உறவ செக்ஸ் டார்ச்சர்னு சொல்லி கொச்சப்படுத்துறீங்க. தப்பிக்கிறதுக்கு தந்திரமா யோசிக்கிறதா நினைச்சு பொய்யான விசயத்த திருப்பி திருப்பி சொல்றீங்க. ஆனா, மக்களுக்கு உண்மை என்னன்னு தெரியும். அதனால தான் அவங்க எங்க பக்கம் இருக்காங்க. உங்ககிட்ட ஏமாந்தவங்க உங்கள பத்தின உண்மைகள எனக்கு அனுப்பிட்டே இருக்காங்க. அதெல்லாம் வெளிய விட்டா உங்களுக்கு தான் அசிங்கம். இதோடு நிறுத்திக்கோங்க சம்யுக்தா. என் வழியில என்னை போகவிடுங்க' என்று எச்சரித்து பேசியுள்ளார்.