மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் | சம்பளம் உயர்த்தியதால் ‛யுடர்ன்' போடும் தயாரிப்பாளர்கள் | வில்லி கிடைத்தால் சொல்லியடிப்பேன்: 'தில்' காட்டும் நடிகை திவ்யா | நிழல் உலகில் நனவான தச்சனியின் கனவு | பிளாஷ்பேக்: இளையராஜா, கண்ணதாசன், எஸ் பி பி மூவரையும் முதன் முதலில் இணைத்த “பாலூட்டி வளர்த்த கிளி” | 75 வயதில் பிளஸ் டூ தேர்வு எழுத தயாரான மலையாள நடிகை |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் உமர் லுலு. ஹேப்பி வெட்டிங், ஜிங்ஸ், ஒரு அடார் லவ், நல்ல சமயம், டமாக்கா , பேட் பாய்ஸ் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், பட வாய்ப்பு தருவதாக கூறி ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒமர் லுலு இயக்கிய படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்துவதாக அந்த நடிகைக்கு ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த நடிகை கொச்சி அருகே உள்ள நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், படவாய்ப்பு தருவதாக கூறி நட்பாக பழகி ஒமர் லுலு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் ஒமர் லுலு மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.