பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போகிறதா? | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பேரரசு! | சூர்யா 47வது படத்தின் புதிய அப்டேட்! | ஆஸ்கர் வென்ற பாடல் பிரபலத்துடன் இணையும் பிரபாஸ்! | ‛வாரணாசி' படத்தால் நாடே பெருமைப்படும்: மகேஷ் பாபு பேச்சு | ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' |

மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் உமர் லுலு. ஹேப்பி வெட்டிங், ஜிங்ஸ், ஒரு அடார் லவ், நல்ல சமயம், டமாக்கா , பேட் பாய்ஸ் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், பட வாய்ப்பு தருவதாக கூறி ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒமர் லுலு இயக்கிய படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்துவதாக அந்த நடிகைக்கு ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த நடிகை கொச்சி அருகே உள்ள நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், படவாய்ப்பு தருவதாக கூறி நட்பாக பழகி ஒமர் லுலு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் ஒமர் லுலு மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.