நமது தேசத்திற்கு எனது பங்களிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளதை பாக்கியமாகக் கருதுகிறேன் - அஜித் நன்றி | நடிகர் அஜித், நடிகை ஷோபனாவிற்கு பத்ம பூஷன் விருது | இயக்குனரைக் கவர்ந்த ராஷ்மிகாவின் கண்கள் | ஓராண்டிற்கு பின் இந்து தமிழ் முறைப்படி இரண்டாவது முறை திருமணம் செய்த லப்பர் பந்து நாயகி | வீடு வாடகை பிரச்னை ; கலைமாமணி பட்டத்தை காணவில்லை : கதறும் கஞ்சா கருப்பு | பெண் தயாரிப்பாளர் புகார் : உன்னி கிருஷ்ணன் மீது வழக்கு | அருண் விஜய்க்கு கொடுத்த வாக்கை காப்பாற்ற மிகப்பெரிய ஹீரோவின் கோரிக்கையை நிராகரித்த மகிழ்திருமேனி | மகள் பவதாரிணி மறைந்து ஓராண்டு : இளையராஜா உருக்கம் | ராஜமவுலி இயக்கத்தில் மகேஷ் பாபு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிப்பது உறுதி | 'ரெட்ட தல' டப்பிங்கை முடித்த அருண் விஜய் |
மலையாள சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் உமர் லுலு. ஹேப்பி வெட்டிங், ஜிங்ஸ், ஒரு அடார் லவ், நல்ல சமயம், டமாக்கா , பேட் பாய்ஸ் உள்பட பல படங்களை இயக்கியுள்ளார். இந்நிலையில், பட வாய்ப்பு தருவதாக கூறி ஒமர் லுலு தன்னை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகை போலீசில் புகார் அளித்துள்ளார்.
பல படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்த அந்த நடிகை ஒமர் லுலு இயக்கிய படங்களிலும் நடித்துள்ளார். விரைவில் ஹீரோயினியாக அறிமுகப்படுத்துவதாக அந்த நடிகைக்கு ஆசை வார்த்தை கூறி அவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனால் அந்த நடிகை கொச்சி அருகே உள்ள நெடும்பச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் கொடுத்துள்ள மனுவில், படவாய்ப்பு தருவதாக கூறி நட்பாக பழகி ஒமர் லுலு கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரை தன்னை பல முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக தெரிவித்துள்ளார். இதை தொடர்ந்து இயக்குனர் ஒமர் லுலு மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.