புதிய பிராண்ட் கார் வாங்கிய சீரியல் நடிகை வைஷாலி தனிகா! | ரஜினிக்கு எழுதிய கதையை சூர்யாவுக்காக திருத்தம் செய்த கார்த்திக் சுப்பராஜ்! | சிவகார்த்திகேயன் - ஸ்ருதிஹாசனை இயக்கும் லோகேஷ் கனகராஜ்! | வேட்டையனை தொடர்ந்து ஜெயிலர் -2விலும் ரஜினியுடன் இணைந்த பஹத் பாசில்! | காஷ்மீர் தாக்குதல்: உயிர் தப்பிய பாலிவுட் நடிகை | சொட்டைத் தலையர்களின் கதை 'சொட்ட சொட்ட நனையுது' | பெரிய பட்ஜெட்டில் உருவான 'டிடி நெக்ஸ்ட் லெவல்': சந்தானம் தகவல் | நான் சிம்ரனோடு நடிக்க கூடாதா: சசிகுமார் கேள்வி | பிளாஷ்பேக்: அப்போதே அதிர வைத்த திகில் படம் | பிளாஷ்பேக்: என்.எஸ்.கே இடத்தை பிடித்த காமெடி நடிகர் |
விஜய் டிவியில் அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கபட்ட சீரியல், கிழக்கு வாசல். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட், ரேஷ்மா, அருண்குமார் ராஜன், அஸ்வினி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வந்தனர். சீரியலில் திரைக்கதை நன்றாக இருந்தாலும் சரியான டைம் ஸ்லாட் கிடைக்காததால் டிஆர்பியில் முன்னேற்றமில்லாமல் தவித்து வந்தது.
இந்நிலையில் இந்த தொடரை முடித்து வைக்க சீரியல் குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இதற்காக கிளைமாக்ஸ் காட்சியும் அண்மையில் படமாக்கியுள்ளனர். ஆனால், சீரியலின் கதாநாயகி வராமலேயே அந்த காட்சியை படமாக்கி சீரியலை முடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரேஷ்மா, ஒரு மாதத்திற்கும் மேலாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த சீரியலில் நடித்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.