'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
விஜய் டிவியில் அதிக எதிர்பார்ப்புடன் தொடங்கபட்ட சீரியல், கிழக்கு வாசல். இதில் எஸ்.ஏ.சந்திரசேகர், வெங்கட், ரேஷ்மா, அருண்குமார் ராஜன், அஸ்வினி என ஒரு நடிகர் பட்டாளமே நடித்து வந்தனர். சீரியலில் திரைக்கதை நன்றாக இருந்தாலும் சரியான டைம் ஸ்லாட் கிடைக்காததால் டிஆர்பியில் முன்னேற்றமில்லாமல் தவித்து வந்தது.
இந்நிலையில் இந்த தொடரை முடித்து வைக்க சீரியல் குழுவினர் முடிவெடுத்துள்ளனர். இதற்காக கிளைமாக்ஸ் காட்சியும் அண்மையில் படமாக்கியுள்ளனர். ஆனால், சீரியலின் கதாநாயகி வராமலேயே அந்த காட்சியை படமாக்கி சீரியலை முடித்து வைத்துள்ளனர். இதுகுறித்து தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள ரேஷ்மா, ஒரு மாதத்திற்கும் மேலாக தனக்கு உடல்நிலை சரியில்லை என்றும், எனவே தான் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், இந்த சீரியலில் நடித்த அனுபவத்தை என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.