பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த நெஞ்சத்தை கிள்ளாதே தொடர் திடீரென முடிவுக்கு வந்தது. தான் ஹீரோயினாக நடித்து வந்த தொடர் பாதியிலேயே முடிவுக்கு வந்துவிட்டதால் ரேஷ்மா முரளிதரன் மிகவும் விரக்தியுடன் பதிவிட்டிருந்தார். இதனையடுத்து நாயகன் ஜெய் ஆகாஷ் 'நான் இல்லாததால் கதை விறுவிறுப்பாக செல்லவில்லை. எனக்கு பதிலாக இன்னொருவரை நடிக்க வைக்கவும் சீரியல் குழுவினர் ஒத்துக் கொள்ளாததால் சீரியலை பாதியிலேயே முடித்து வைக்கும் கட்டாயம் ஏற்பட்டது' என்று கூறியிருந்தார்.
இதனை பார்த்த ரேஷ்மாவின் ரசிகர்கள் 'நீங்கள் இல்லாததால் சீரியல் இண்ட்ரஸ்டிங்கா இல்லை என்று யார் சொன்னது? ரொம்ப ஓவரா தற்பெருமை பேசாதீங்க' என்று பதிலடி கொடுத்தனர். பதிலுக்கு ஜெய் ஆகாஷ் ரசிகர்களும் ரேஷ்மாவை திட்டியும் அவரது ரசிகர்களிடம் சண்டையிட்டும் வருகின்றனர்.
ஒருகட்டத்தில் மிகவும் கடுப்பான ரேஷ்மா, 'உங்களுக்கு நடந்த உண்மை தெரியவில்லை என்றால் தயவு செய்து தவறான வதந்திகளை பரப்பாதீர்கள். இந்த தொடர் எதற்காக முடிவுக்கு வந்தது என்பதை இதில் பணியாற்றிய அனைவரும் அறிவர். இதில் என்னுடைய தவறோ, எங்கள் டீமின் தவறோ எதுவுமில்லை. என்னையும் எனது பேன் பேஜ்களையும் அட்டாக் செய்வதால் உண்மை மாறப்போவதில்லை. நீங்கள் உங்கள் ஹீரோவுக்கு ஆதரவாக இருங்கள் ஆனால், விஷமத்தை பரப்பாதீர்கள்' என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.




