'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
விஜய் டிவி தொகுப்பாளினியான ஜாக்குலினிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு எப்போதும் உண்டு. சினிமா மற்றும் சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான இவர், தொடர்ந்து நடிக்கும் ஆசையில் சின்னத்திரையில் தோன்றுவதிலிருந்து கொஞ்சம் ப்ரேக் விட்டிருந்தார். ஆனால், பட வாய்ப்புகள் பெரிய அளவில் கிடைக்காததால் பிக்பாஸ் சீசன் 8 துவங்கிய போது முதல் ஆளாக துண்டு போட்டு வந்துவிட்டார். அதற்கேற்றார்போல் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் ஜாக்குலினுக்கு மக்களின் பேராதரவு கிடைத்தது. 15 முறை எலிமினேஷனுக்கு நாமினேட் ஆகி 15 முறையும் மக்களால் அதிக வாக்களிக்கப்பட்டு காப்பாற்ற பெற்ற ஒரே பிக்பாஸ் போட்டியாளர் என்ற சாதனையையும் ஜாக்குலின் படைத்துவிட்டார்.
ஒரு கட்டத்தில் டைட்டில் வின்னராகவோ, டாப் 3 இடத்திலோ ஜாக்குலின் வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பணப்பெட்டி டாஸ்க்கின் போது அதிரடியாக வெளியேற்றப்பட்டார். இது ஜாக்குலின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தந்தது. இந்நிலையில், பிக்பாஸ் கிராண்ட் பினாலேவின் ஜாக்குலினின் பயண வீடியோ ஒளிபரப்ப பட்டபோது நேயர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து வரவேற்றனர். ஜாக்குலினுக்காக பலர் அழுதனர். இதைபார்த்து எமோஷ்னல் ஆன ஜாக்குலின், மக்கள் தன் மீது வைத்திருக்கும் பாசத்திற்கு நன்றியினை தெரிவித்து தற்போது வீடியோ வெளியிட்டுள்ளார்.