நாகார்ஜுனா 100வது படத்தில் இணைந்த நடிகை சுஷ்மிதா பட்! | ‛வா வாத்தியார்' டைட்டிலின் பின்னணி ; ஆனந்தராஜ் சொன்ன தகவல் | தனுஷ் பட ஒளிப்பதிவாளருக்கு கிடைத்த மரியாதை | கவுதம் ராம் கார்த்திக்கின் ‛ரூட்' படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவு பெற்றது! | சத்ய சாய் பாபா படத்தை இயக்கும் சுரேஷ் கிருஷ்ணா! | 'பெத்தி' படத்திலிருந்து ஜான்வி கபூர் முதல் பார்வை வெளியானது! | ‛மேயாத மான்' ரத்னகுமார் படத்தை தயாரிக்கும் இயக்குனர்கள்! | வாரிசு பட இயக்குனரின் அடுத்த படத்தில் நடந்த ட்விஸ்ட்! | கமல் பிறந்தநாளில் ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்! | டப்பிங்கில் இவ்வளவு விஷயங்களா? விளக்குகிறார் ஷ்யாம் குமார் |

ஜீ தமிழில் கடந்த 2022ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மாரி'. இதில், ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை தாண்டிவிட்ட இந்த தொடர், சமீபகாலமாக அரைத்த மாவையே அரைப்பது போல் சுமாராக ஓடி வருகிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் இந்த தொடரில் நடித்து வரும் ஹீரோயின் ஆஷிகா படுகோன் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்போது அதை மறுத்துவிட்ட ஆஷிகா தொடர்ந்து சில எபிசோடுகள் நடித்து வந்த நிலையில் தற்போது மாரி தொடரை விட்டு விலகுவதாக அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், மாரி தொடரில் தனது பயணம் முடிந்துவிட்டதாகவும் இத்தனை நாட்கள் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.