தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

ஜீ தமிழில் கடந்த 2022ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மாரி'. இதில், ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை தாண்டிவிட்ட இந்த தொடர், சமீபகாலமாக அரைத்த மாவையே அரைப்பது போல் சுமாராக ஓடி வருகிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் இந்த தொடரில் நடித்து வரும் ஹீரோயின் ஆஷிகா படுகோன் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்போது அதை மறுத்துவிட்ட ஆஷிகா தொடர்ந்து சில எபிசோடுகள் நடித்து வந்த நிலையில் தற்போது மாரி தொடரை விட்டு விலகுவதாக அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், மாரி தொடரில் தனது பயணம் முடிந்துவிட்டதாகவும் இத்தனை நாட்கள் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.