பாலிவுட்டில் கவனம் செலுத்தும் ராஷி கண்ணா | பவிஷின் ‛லவ் ஓ லவ்' முதல்பார்வை வெளியீடு | ஒரே வாரத்தில் ஆயிரம் கோடி வசூல் செய்த துரந்தர் 2 | நேரடி ஓடிடி ரிலீஸ் : விஜய் சேதுபதி நடிக்கும் காட்டான் முதல் வரிசை கட்டும் புதுவரவுகள் | ஐஸ்வர்யா ராய் பார்த்து நடிக்க ஆசைப்பட்டேன்: அபிநயா | கோவாவில் செட்டில் ஆகிறாரா ரவிமோகன் | 'எல்ஐகே' படத்தால் மாறிய 'காளிதாஸ் 2, லீடர்' வெளியீடுகள் | தாய்லாந்து தீவில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா ஹனிமூன் | பிரசாந்த் நடிக்க வேண்டிய 'பூவே உனக்காக' : தேடிப் போன விஜய் அப்பா…! | 'பெத்தி' படப்பிடிப்பில் ராம்சரணுக்கு கண்ணில் காயம் பட்டதா ? படக்குழுவினர் விளக்கம் |

ஜீ தமிழில் கடந்த 2022ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர் 'மாரி'. இதில், ஆஷிகா படுகோன் ஹீரோயினாக நடித்து வருகிறார். கிட்டத்தட்ட 800 எபிசோடுகளை தாண்டிவிட்ட இந்த தொடர், சமீபகாலமாக அரைத்த மாவையே அரைப்பது போல் சுமாராக ஓடி வருகிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன் இந்த தொடரில் நடித்து வரும் ஹீரோயின் ஆஷிகா படுகோன் சீரியலை விட்டு விலகுவதாக செய்திகள் வெளியானது. ஆனால், அப்போது அதை மறுத்துவிட்ட ஆஷிகா தொடர்ந்து சில எபிசோடுகள் நடித்து வந்த நிலையில் தற்போது மாரி தொடரை விட்டு விலகுவதாக அவரே அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள அவர், மாரி தொடரில் தனது பயணம் முடிந்துவிட்டதாகவும் இத்தனை நாட்கள் ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தும் பதிவிட்டுள்ளார்.