திருமணமா...? வதந்திகளை பரப்பாதீர்கள் : அனிருத் | சூர்யாவின் 'டிராப் இயக்குனர்கள்' பட்டியலில் இணைகிறாரா வெற்றிமாறன்? | ஓடிடியில் அதிக தொகைக்கு விற்பனையான அனுஷ்காவின் காட்டி | இயக்குனர் அட்லிக்கு கவுரவ டாக்டர் பட்டம் | பறந்து போ படத்தில் யுவன் இல்லாதது ஏன்? ராம் விளக்கம் | கிங்டம் படத்தின் ரிலீஸ் தேதியில் மீண்டும் மாற்றமா? | பிளாஷ்பேக்: பாரதிராஜா கைவிட்ட 'பச்சைக்கொடி' | நடிகர் சங்கத்தின் பெயரில் 40 லட்சம் மோசடி: முன்னாள் மேலாளர் மீது புகார் | பிளாஷ்பேக் : அழகும், குரலும் சரியில்லாததால் மனைவியை நீக்கிய தயாரிப்பாளர் | மன்னிப்பு கேட்காத கமல்: நீதிபதி அதிருப்தி |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முத்தழகு தொடரில் கிராமத்து கதாநாயகியாக டிக் டாக் பிரபலம் ஷோபனா நடித்து வருகிறார். இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், ஷோபனாவுக்கும் பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. இந்நிலையில், ஷோபனா அண்மையில் சென்னை திருவேற்காடு பகுதியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது, அந்த கிராமத்து பெண்கள் பலரும் ஷோபனாவின் காரை மறித்து அவரிடம் ஆனந்தமாக பேசியதுடன் ஷோபனாவின் நடிப்பையும் பாராட்டியுள்ளனர். இதன் வீடியோவை ஷோபனா தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட இணையதள ரசிகர்களும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.