இதயம் முரளி ஆக மாறிய அதர்வா | ரேவதி இயக்கத்தில் பிரியாமணி, ஆரி புதிய வெப் தொடர் | சூர்யாவின் ரெட்ரோ படத்தின் 'கண்ணாடி பூவே' பாடல் வெளியீடு | விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் | லாபத்தில் நுழைந்த 'தண்டேல்' | மார்வெல் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் 'கேப்டன் அமெரிக்கா - பிரேவ் நியூ வேர்ல்டு' | சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் | லூசிபர் 2ம் பாகத்திலும் அதிக முக்கியத்துவம் : நடிகை நைலா உஷா பெருமிதம் | மே மாத ரிலீஸுக்கு தயாராகும் பஹத் பாசிலின் 'ஓடும் குதிர சாடும் குதிர' | அதை மஞ்சுவாரியரிடமே போய் கேளுங்கள் ; நடிகை பார்வதி காட்டம் |
நடன இயக்குநர் நந்தா மாஸ்டர் சின்னத்திரை சீரியல்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமாகியுள்ளார். அந்த வகையில் அவர் நடித்து வந்த கண்ணே கலைமானே சீரியல் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. இதற்கிடையில், ஷூட்டிங் ஸ்பாட்டில் காலில் அடிபட்டு ரெஸ்ட் எடுக்க சென்ற அவர், திடீரென சீரியலை விட்டு விலகுவதாக அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்நிலையில், அவர் தற்போது சீரியலை விட்டு விலகியதற்கான காரணத்தை கூறியுள்ளார். ஷூட்டிங் ஸ்பாட்டில் காலில் அடிபட்ட போதிலும் தன்னை தொடர்ந்து நடிக்க வற்புறுத்தியதாகவும், ஆப்ரேஷன் செய்ய வேண்டிய நிலையிலும் தன்னை நடிக்க அழைத்ததால் சேனல் தரப்புடன் மனகசப்பு ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார். இதன் காரணமாக தான் கண்ணே கலைமானே சீரியலிலிருந்து விலகிவிட்டதாக நந்தா மாஸ்டர் கூறியுள்ளார். நந்தா மாஸ்டர் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நளதமயந்தி என்கிற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.