ஹீரோ ஆனார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | ‛சக்தி திருமகன்' முதல் ‛ஓஜி' வரை : இந்த வார ஓடிடி ஸ்பெஷல்....! | 'பைசன்' படத்தை பாராட்டிய பா.ஜ.,வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை! | ஹாட்ரிக் ரூ.100 கோடி வசூலை தந்த பிரதீப் ரங்கநாதன் | அக்டோபர் 31ல் நெட் பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் தனுஷின் இட்லி கடை! | 5 நிமிட நடனத்திற்கு ஐந்து கோடி சம்பளம் வாங்கும் பூஜா ஹெக்டே! | கருத்த மச்சான் பாடலுக்கு மமிதா பைஜூ அசத்தல் நடனம் ! வைரலாகும் வீடியோ!! | கிண்டல் செய்த ரசிகருக்கு பதிலடி கொடுத்த சூரி | 'பராசக்தி' பாடல்கள் விரைவில்… ஜிவி பிரகாஷ் தகவல் | கதை நாயகியான கீதா கைலாசம் |

பிரபல சீரியல் நடிகர்களான ரச்சிதா மகாலெட்சுமியும் தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட சில பிரச்னைகளால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். அதிலும், பிக்பாஸ் வீட்டில் ரச்சிதா இருந்த போது தினேஷ் எவ்வளவோ தனது சப்போர்ட்டை ரச்சிதாவுக்காக கொடுத்தார். ஆனாலும், பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த ரச்சிதா தினேஷை கண்டு கொள்ளவேயில்லை. இதற்கிடையில் தினேஷ் மீது ரச்சிதா போலீஸ் புகார் அளிக்க, அதன்பின் அது விவாகரத்து வழக்காக நீதிமன்றத்துக்கு சென்றது.
இந்நிலையில், அண்மையில் பேட்டியளித்துள்ள தினேஷ், 'எனக்கும் ரச்சிதாவுக்கும் இன்னும் விவாகரத்து ஆகவில்லை. வழக்கு தான் போய்க் கொண்டிருக்கிறது' என்று கூறியுள்ளார். மேலும், பிக்பாஸில் ரச்சிதா கலந்து கொண்ட போது ரச்சிதா வெற்றி பெற வேண்டுமென்று நினைத்ததாகவும், ஒருவேளை நான் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்தால் டைட்டில் பட்டத்தை வென்று அவருக்கு கொடுக்கலாம் என்று இருந்ததாகவும் கூறியுள்ளார். தற்போது சீரியலில் பிசியாக நடித்து வருவதால் பிக்பாஸில் கலந்து கொள்ள விருப்பமில்லை என்றும் தினேஷ் கூறியுள்ளார்.




