சினிமா சங்கப் பிரச்னைகள் : தயாரிப்பாளர் சங்கம் போலீசில் புகார் | தங்கர் பச்சான் மகன் படத்தில் நடிக்கும் போது வலியை அனுபவித்து அழுதேன்: ஷாலி | எனது கதையைத்தான் திருடி இருக்கிறார்கள் : 'லாபத்தா லேடிஸ்' கதாசிரியர் குற்றச்சாட்டு | சினிமாவில் நடிப்பது எனது தனிப்பட்ட முடிவு : குஷ்பு மகள் அவந்திகா சொல்கிறார் | பிளாஷ்பேக்: முதல் செஞ்சுரி அடித்த சிவாஜி | பிளாஷ்பேக் : ஒரே படத்துடன் காணாமல் போன நடிகை | 'ஸ்டன்ட் டிசைன்' ஆஸ்கர் விருது அறிவிப்பு: ராஜமவுலி மகிழ்ச்சி | சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பவன் கல்யாண் மகன் | ஹாலிவுட் திரைப்படங்களுக்குக் கட்டுப்பாடு விதிக்கும் சீனா | 2028 முதல் ஆஸ்கர் விருதுகளில் சேர்க்கப்படும் 'ஸ்டன்ட் டிசைன்' |
சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் நாசரேத்பேட்டையில் உள்ள ஹோட்டல் அறையிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார். இது தொடர்பில் வழக்கு தொடரப்பட்டு சித்ராவின் கணவர் ஹேம்நாத் உட்பட சிலரிடம் கடந்த 3 வருடங்களாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் இந்த வழக்கு விசாரணையை திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திலிருந்து சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த வெங்கடேஷ், வழக்கை சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்ற விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரித்தார். அதேசமயம் வழக்கின் விசாராணையை ஆறுமாதங்களில் முடிக்க வேண்டும் என திருவள்ளூர் மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.