ஹரி ஹர வீர மல்லு படம் தள்ளிப்போகிறதா? | ரேவதி இயக்கத்தில் பிரியாமணியின் ‛குட் ஒயிப்' | பெண் இயக்குனரின் பேண்டசி படம் 'மரகதமலை' | 5 ஆண்டுகளாக உருவான 'சையாரா' பாடல்கள் | தக் லைப் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி | 7 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள திரைப்பட விருதுகளை வழங்குங்கள்: தமிழக அரசுக்கு கோரிக்கை | கர்நாடகாவில் 'தக்லைப்' வெளியிட வர்த்தக சபை அனுமதிக்கணும்: நடப்பு தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தல் | வெற்றி பயத்தில் ராஷ்மிகா, பூஜா ஹெக்டே | தக் லைப் விவகாரத்தால் கலக்கத்தில் ஜனநாயகன் | பிளாஷ்பேக்: சிவாஜி படத்திற்கு கதை எழுதி தயாரித்த என்.டி.ராமராவ் |
ரோஜா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரை ரசிகர்களின் பேவரைட் ஹீரோயினாக வலம் வந்தார் நடிகை பிரியங்கா நல்காரி. தொடர்ந்து ஜீ தமிழில் சீதா ராமன் சீரியலில் என்ட்ரி கொடுத்த அவர் திடீரென காதலர் ராகுல் வர்மாவை திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு கணவருக்கு நடிப்பது பிடிக்கவில்லை, அதனால் விலகுகிறேன் என்பது போல் அறிவித்துவிட்டு சீரியலிலிருந்து வெளியேறினார். இதனால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தனர். ஆனால், தற்போது ஆந்திரா மாநிலத்தின் கிராமத்து பெண் போல் கெட்டப் போட்டு போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ள பிரியங்கா, 'ரோஸ் இஸ் பேக்', 'ரீ-என்ட்ரி இன் தெலுங்கு' என சில ஹேஷ்டேக்குகளையும் தனது பதிவுகளில் குறிப்பிட்டுள்ளார். இதனால், அவர் மீண்டும் தெலுங்கு சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்க இருக்கிறார் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.